தியாக பூமி கல்கி

தியாக பூமி கல்கி eBook Free Download

தியாக பூமி PDF | ePub | Mobi (Kindle)

[wpsm_member ]

  • தியாக பூமி PDF
  • தியாக பூமி ePub
  • தியாக பூமி Mobi

[/wpsm_member]

Description

தியாக பூமி கல்கி

தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். 1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது. தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது.

இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.

தியாக பூமி: கதைச் சுருக்கம்

நெடுங்கரை சம்பு சாஸ்திரிகள் அவர்களின் புதல்வி சாவித்திரி. வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் அவள் நகரத்து இளைஞனான ஸ்ரீதரனுக்கு பதின்வயதின் தொடக்கத்திலேயே மணமுடித்து கொடுக்கப்படுகிறாள். அவளின் திருமணதிற்கு வாங்கிய கடனால் அவளின் தந்தை பெரிதும் இன்னலுறுகின்றார். மேலும் பிராமண வகுப்பை சேர்ந்த அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவுவதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கபடுகின்றார். இதன காரணமாக அவர் தன் சொத்துகளை இழந்து ஊரைவிட்டே செல்லும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றார். அதனால் அவர் சென்னைக்கு சென்று இசை ஆசிரியராக பணிபுரிகின்றார்.
அதே சமயம் அவரின் மகள் கணவர் வீட்டில் ஒதுக்கப்பட்டு நிறைமாத கர்ப்பிணியாக தனியாக ஊருக்கு அனுப்பப்படுகின்றார். அங்கு அவளின் தந்தை இல்லாததால் அவளும் சென்னைக்கு செல்கிறாள். ஒரு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுக்கும் அவள் தான் பெற்ற குழந்தையை அவளுடைய தந்தையின் குடிசை அருகே போட்டுவிட்டு சென்றுவிடுகிறாள். அவரும் அது தன் பேத்தி என்று தெரியாமலே சாருலதா என பெயரிட்டு அன்புடன் வளர்க்கிறார்.
அதன் பின்னர் சாவித்திரி தன் சொந்த அத்தையின் சொத்துகளைப் பெற்று கோடீஸ்வரியாகிறாள். பின்னர் உமாதேவி என்ற பெயரில் பல தானதர்மங்கள் செய்து ஊரில் பெரும் புகழ் பெறுகிறாள். இதன் பின்னர் அவளை விட்டு சென்ற கணவன் அவளின் சொத்துக்களுக்காக அவளுடன் சேர்ந்து வாழ நீதிமன்றத்தில் வழக்கு தொடுகின்றான். அதன் பின்னர் நடந்தவைகளையும், அவளின் குழந்தை மற்றும் மற்றவர்களின் நிலை என்ன, அவர்கள் சேர்ந்தார்களா என்பது போன்ற நிகழ்வுகளை அதற்கு பின்வரும் பகுதிகள் விளக்குகின்றன.

தியாக பூமி: பகுதிகள்

இப்புதினமானது,

  1. கோடை,
  2. மழை,
  3. பனி,
  4. இளவேனில்

ஆகிய 4 பாகங்களை உடையது. இப்பாகங்கள் முறையே 11, 10, 16, 32 அத்தியாயங்களை கொண்டு மொத்தம் 69 அத்தியாயங்களை கொண்டுள்ளது.

கதைமாந்தர்கள்

  • சாவித்திரி, உமாதேவி
  • நெடுங்கரை சம்பு சாஸ்திரிகள்
  • ஸ்ரீதரன்
  • சாருலதா

 

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “தியாக பூமி கல்கி”

Your email address will not be published. Required fields are marked *