ஆத்திச்சூடி என்பது ஔவையார் அவர்கள் இயற்றிய நீதி நூல் ஆகும். ஆத்திசூடி நூல் இயற்றப்பட்ட காலம் கிபி 12ஆம் நூற்றாண்டு. குழந்தைகள் தங்கள் இளமைப்பருவத்தில் நல்ல கருத்துக்களையும், தகவல்களையும் எளிதில் பாடம் செய்து மனதில் நிறுத்திக் கொள்ளுமாறு சிறுசிறு வாக்கியங்களில் எளிமையாக அமைந்தது இந்த ஆத்திச்சூடி நூல்.
நம்முடைய தமிழ் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாகும் எனவேதான் அந்தகால குழுவில் முறையிலிருந்து என்று பயன்படுத்திவரும் மெக்காலே கல்வி முறை வரை, சிறுவர் பள்ளிகளில் ஆத்திச்சூடி கற்பிக்கப்படுகின்றது.
இதன்மூலம் குழந்தைகள் நல்லொழுக்கத்தையும் அதேசமயம் தமிழின் உயிர் எழுத்துக்களையும் எளிதாக கற்க முடிகிறது.
அவ்வையார் என்ற பெயர் தமிழ் சமூகத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த பெயருக்கு சொந்தமானவர் இன்று நம்மில் பல பேர் குறிப்பது ஒரு வயதான பெண் புலவரைப் பற்றி.
உண்மையில் அவ்வையார் பற்றிய போதுமான தகவல்கள் நம்மிடம் கிடையாது. சங்க காலம் தொட்டு பதினெட்டாம் நூற்றாண்டு வரை பலர் என்ற பெயரில் நமது வரலாற்றில் இடம் பெறுகிறார்கள்.
அதியமான் நெல்லிக்கனியை கொடுத்தது ஒரு அவ்வையார் ஆத்திசூடி எழுதியது வேறொரு அவ்வையார்.இவ்வாறு அவ்வையார் என்ற பெயர் பல இடங்களில் பல பல காலகட்டங்களில் தமிழகத்தின் வரலாற்றில் இடம் பெறுகின்றது.
அவரைப்பற்றிய மேலும் பல தகவல்களை அறிய இந்த இணைப்பே பயன்படுத்துக.
ஆசிரியர்: ஔவையார்
பாடல்கள்: 109
இலக்கணம்: காப்புச் செய்யுள்
ஆத்திசூடி என்ற நூலை இயற்றியவர் யார் இந்த நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 109.
ஔவையார் இயற்றியமேலும் சில நூல்கள் : கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை என்பவையாக்கும்
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
சொற்பொருள்:
Available Downloads | ePub, Mobi, PDF |
---|---|
Authors Name | |
Size (PDF) | 1 to 5 MB |
வாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..
Reviews
There are no reviews yet.