Description
எதிர்பாராத முத்தம் Read Online
எதிர்பாராத முத்தம்
குமரகுருபர தேசிகர், 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் கவிஞர் மற்றும் சைவ துறவி. இறைவன் முருகன் அருளால் ஊமை நிலை நீங்கிப் பேசினார். அதன் பின்னர் பல சைவ துதி நூல்களை இயற்றியுள்ளார். இவர் இறைத்தொண்டு மிகுதியால் தருமபுரம் பண்டார சந்நிதியை அடைந்து ஞான உபதேசம் கேட்டார். பண்டார சந்நிதி வெரைச் சிதம்பரம் சென்று வரக் கட்டளையிட்டார். அவரே பின்னாளில் குமரகுருபரரை வடக்கே சென்று இறைப்பணிச் செய்ய உத்தரவிட்டார் என வரலாறு குறிப்புக்கள் உள்ளன. இருப்பினும் அதில் எதற்காக அவரை வடநாடு செல்ல உத்தரவிட்டார் என்பது குறித்து எந்த விவரமும் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன் அதற்கான காரணத்தை கவிதை வடிவில் ஒரு புனைவு கவிதையாக இயற்றியுள்ளார்.
Reviews
There are no reviews yet.