Sale!

திருக்குறள் செய்திகள்

0.009.00

திருக்குறள் செய்திகள்

FREE DOWNLOAD AZW3/ePub/PDF

Description

திருக்குறள் செய்திகள் Read Online

திருக்குறள் செய்திகள்

திருக்குறள் செய்திகள் ஆசிரியர் பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்

திருக்குறள் தெளிவுரைகள் பல வெளிவந்துள்ளன. பதவுரைப் பதிப்புகளும் உள்ளன. இது குறட்பாக்களைத் தாராமல் செய்திகளை மட்டும் தர முற்படுகிறது.

குறட்பாப் படிப்பலர் அதன் செய்திகளை அறிவதில்லை; ஒரு சில குறட்பாக்களை ஒப்புவிக்கின்றனர். அவை தேர்ந்து எடுக்கப்பட்டவை; அடிக்கடி ஆளப்படுபவை. மொத்தமாகக் குறட்பா கூறுவது யாது? என்று கேட்டால் சொல்ல இயல்வதில்லை. செய்திகள், கற்றோர்க்கும் புலமை பெறாதவர்க்கும் தேவை: அவை வாழ்க்கைக்குப் பயன்படுவன. வள்ளுவர் கருத்துகளை இன்றைய நடைமுறை மொழியில் தெரிவிக்க எடுத்தக் கொண்ட முயற்சி இது.

நூலை அறிமுகப்படுத்த அணிந்துரைகள் தேவைப்படுகின்றன. இவற்றை நல்கிய அறிஞர் காவல்துறைத் தலைவர் ஸ்ரீபால் செந்தமிழ் வேந்தர் அவர்களுக்கும், கவிஞர் மதுநெஞ்சன் அவர்களுக்கும், புலவர் ஐயா திரு. இராம. சுப்பிரமணியன் அவர்களுக்கும், கவிஞர் குமரன் அவர்களுக்கும் நன்றி உடையேன்.

திருக்குறளைப் பிற மொழியாளர் அறிய முடிகிறது: தமிழ் அறிந்தவர்கள் அறிய முடிவதில்லை. தொடர்ச்சியாக உரை நடையில் படிக்கும்போது அந்தக் கருத்துகளை அறிய முடிகிறது. வாழ்க்கைக்கு வழிகாட்டுவது திருக்குறள்; பயன்மிகப் பெரிது, புலமை குறுக்கிடத் தேவையில்லை. அனைவரும் படிக்க எழுதப்பட்டது.

ரா. சீனிவாசன்

 

திருக்குறள் செய்திகள்

1. கடவுள் வாழ்த்து

ஏட்டுச் சுவடி எடுத்துக் காட்டும் முதல் எழுத்து அகரமாகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் உலகைப் படைத்தவன் இறைவன் ஆவான்; அவனே உலகத்தின் தொடக்கமும் ஆவான்.

படித்துப் படித்து நீ பண்டிதன் ஆகலாம்; அதை மடித்து வைத்துவிட்டு நீ சுயமாகச் சிந்தித்துப்பார்; இறைவன் தாளை நீ வணங்காதவிடத்து, நீ படித்த தாள்கள் அத்துணையும் வெறும் கோடுகள்; உன் படிப்பும் பயனற்றது ஆகிவிடும்.

அடியவர் உள்ளத் தாமரையில் உவந்து குடியிருப்பவன் இறைவன்; அவன் வெள்ளைத் தாள்களை மனத்தில் நிறுத்து; நீ நிலமிசை நீடு வாழ்வாய்.

விருப்பு வெறுப்பு என்பது அவனிடம் இருப்புக் கொள்வது இல்லை. அவன் தாளை வணங்கு; உன் இடும்பைகள் தீரும்.

இறைவனின் புகழ் பொருள் மிக்கது. அவன் புகழைப் பாடு; இருளில் சேர்க்கும் தீய வினைகள் உன்னை வந்து அடையா.

பொறிகளை அடக்கி நெறிப்பட வாழ்பவர் இறையருள் பெற்று நிறைநாள் வாழ்வர்.

இறைவனுக்கு உவமை இந் நிலஉலகில் யாரையும் கூற இயலாது. தனக்கு உவமை இல்லாதவன்; அவன் தாளை, வணங்கு; உன் மனக்கவலைகள் மாய்ந்து மகிழ்வு பெறுவாய்; அறத்தின் கடல்; அருள்வடிவினன்; அவன் தாள் சேர்பவர் பிறப்பு அறுப்பர்; வீடுபேறு பெறுவர்.

மதிக்கத் தக்க பண்புகள் மிக்கவன் படைத்தோன். அவன் திருவடிகளை வணங்காத தலை பயனற்றது. தலைமை அதனை விட்டு நீங்கிவிடும்; உணர்வு அற்ற பிண்டமாக மதிக்கப்படும்.

பிறப்பு நீந்த முடியாத பெரிய கடல் என்றால், அதனைக் கடக்கும் தெப்பம் இறைவன் திருவடிகள்: பற்றுக அவன் தாள்களை. அவன் தாள்களைப் பற்றியவரே பிறவிக் கடலைக் கடப்பர்.

2. வான் சிறப்பு

வானத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டது மழை; அதனால் அதனை அமுதம் என்று அழைப்பர்.

உண்பவர்க்கு உணவு படைத்துத் தருவது மழை; பருகுவதற்குப் பயன்படுவதும் மழையே, மனித உயிர் வாழ்வுக்குத் தனித்து உதவுவது மழையேயாகும்.

வான்மழை பொய்த்துவிட்டால் இந்த உலகுதான் எப்படி வாழ முடியும்? பசி இதனை வாட்டுவது உறுதி.

கார் காலத்து மழை பெய்யாவிட்டால் ஏர் பிடித்த உழவன் என்ன செய்ய முடியும்? உழவும் வேறு வழி யில்லாமல் அழிவுதான் பெற வேண்டும்.

ஆவதும் அழிவதும் மழையாலே, மழையின் துளி விழவில்லை என்றால் பசும்புல்லும் தலை காட்டவே காட்டாது.

ஆழநீர்க் கடல்தான்; அதுவும் மழை இல்லாவிட்டால் பாழ்பட்டுப் போகும்; அதன் தன்மை திரியும்; அழுகிவிடும்; மழைநீரே அதனைப் புதுப்பிக்கும்.

வானம் வறண்டுவிட்டால் தானம் இல்லை; தருமம் இல்லை; கோயில் இல்லை; பூசை இல்லை; மணி ஓசையும் இல்லை.

நீர் இல்லை என்றால் உயிர் வாழ்க்கை இல்லை; அதன்பின் அவரவர்தம் ஒழுக்கம் கடைப்பிடிக்க இயலாது; அறத்துப் பாலே மழைக்கு அப்பால்தான்.

Additional information

Authors Name

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்குறள் செய்திகள்”

Your email address will not be published. Required fields are marked *