Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அதியமான் வரலாறு

அதிகமான் வரலாறு மற்றூம் அவன் கொடை வலம் பற்றி இந்த பதிவில்பார்களாம் வாங்க :

கடையெழுவள்ளல்களில்ஒருவனான இவன் சிறந்த வள்ளல் மட்டும் அல்ல; பெரு வீரன். புலவர்களிடையே இருந்து இனிதே பொழுது போக்குபவன். எதைச் செய்தாலும் அதில் ஈடுபட்டு ஒருமை மனத்தோடு செயல் செய்யும் இயல்புடையவன்.

தகடூர் கோட்டை:

தருமபுரி என்று கேட்டிருக்கிறீர்களா? சேலம் மாவட்டத்தில் உள்ள ஊர் அது. அந்தப் பேர் பிற்காலத்தில் வந்தது. அந்தக் காலத்தில் அதற்குத்தகடூர்என்று பேர்.

அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில்[/caption]

இப்போது தருமபுரிக்கருகில் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. அது முன் காலத்தில் தகடூரைச் சேர்ந்ததாக இருந்தது. அந்தக் கோட்டையை நடுவிலே பெற்று, நாற்புறமும்விரிவாகவும்அழகாகவும்அமைந்திருந்தது பழைய காலத்துத் தகடூர்.

அதைத் தன் அரசாட்சிக்குரியதலைநகரமாகக் கொண்டு வாழ்ந்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன்.

அதிகர்குலத்தின்முதல்வன்சேரர்குலத்தில்உதித்தவன். மிகப் பழங்காலத்திலேயேஅதிகமானுடையமுன்னோர்கள்அக்குலத்திலிருந்துதனிக்கிளையாகப் பிரிந்து தனியே நாடாளும் உரிமையை மேற்கொண்டிருந்தார்கள். சேரர்களைப் போல முடியுடைமன்னர்களாகவிளங்காவிட்டாலும்அவர்களுக்குரியபனைமாலையை அணிந்து கொண்டார்கள். சேரர்களுக்கும்அதியர்குலத்தினருக்கும் அடிக்கடி பூசல் நிகழ்வது உண்டு.

ஒளவையார் வருகை

அவனை நாடிப் பல புலவர்கள் வந்தார்கள்; பாடினார்கள்; பரிசு பெற்றார்கள். தமிழ்ப்புலமையிலே சிறந்த மூதாட்டியாகிய ஒளவையார் அவனிடம் வந்தார். அப்போது அதிகமான் ஏதோ இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான். அத்தகைய சமயங்களில் யாரும் அவனை அணுக அஞ்சுவார்கள். அரசியல் அதிகாரி ஒருவர் ஒளவையாரைவரவேற்றுத்தாகத்திற்கு நீர் கொடுத்து அமரச் சொன்னார். ஒளவையார் அமர்ந்தார். "மன்னர் மிகவும் முக்கியமான ஆலோசனையில் இருக்கிறார். இதோ வந்துவிடுவார். சற்றுப் பொறுக்க வேண்டும்” என்று அதிகாரி பணிவாகச் சொன்னார். சிறிது நேரம் ஆயிற்று. அதிகமான் வரவில்லை.

பொறுமையை இழந்த ஒளவையார்

ஒளவையார் பொறுமையை இழந்தார். 'எவ்வளவு நேரம் பிச்சைக்காரியைப்போலக்காத்திருப்பது?' என்று கோபம் மூண்டது. உடனே ஒரு பாட்டைப்பாடினர். அங்கே இருந்த வாயில் காவலனைப் பார்த்து அந்தப் பாடலைச்சொல்லத்தொடங்கினார்.

வாற்காரா, வாசற்காரா, கொடையாளிகளின் காதுகளில் தம்முடைய சொற்களை விதைத்து, தம் காரியங்களை முடித்துக்கொள்கிறவர்கள்புலவர்கள். அவர் களுக்குப் பரிசு பெரிதன்று; தரம் அறிந்து பாராட்டும் வரிசைதான் பெரிது.

அதற்காகவே அவர்கள் ஏங்கிக்கிடப்பார்கள். அத்தகையபரிசிலர்களுக்குஅடையாமல் திறந்து வைத்திருக்கிறவாசலைக்காப்பவனே! உன்னுடைய அரசனாகியநெடுமான் அஞ்சி தன் பெருமையைத் தான் அறியவில்லையோ? வந்தவர்களைக் காக்க வைப்பது அவன் பெருமைக்கு இழுக்கு என்பதைத் தெரிந்துகொள்ள வில்லையோ?

அது கிடக்கட்டும். என்னையும் அவன் அறிந்துகொள்ள வில்லையோ? பிச்சைக்காரியைப்போலக் காத்திருக்கும் பேர்வழி நான் அல்லள் என்பதை அவன் உணர வில்லையே! அறிவுடையோரும்புகழுடையோரும் இந்த உலகத்தில் தோன்றுகிறார்கள்; மறைகிறார்கள். பிறகு யாரும் தோன்றாதசூனிய உலகம் அன்றே? எத்தனையோ பேர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கையில் கோடரியையுடைய தச்சன் பெரிய காட்டில் மரத்தைத் தேடி அலையவா வேண்டும்? உபகாரியைத் தேடி நான் அலைய வேண்டியதில்லை. எந்தத்திக்கிலேசென்றாலும் அந்தத் திக்கிலே சோறு கிடைக்கும்" என்று பாடினார்.

பாட்டு முடிவதற்கும் அதிகாரி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஒளவையார் பாடிக்கொண்டிருந்தபோது அங்கே வந்த அதிகாரி அப்பெருமாட்டியின் கோபத்தை உணர்ந்து ஓடிச் சென்று அதிகமானிடம் தெரிவித்தார். உடனே அதிகமான் வந்து விட்டான்.

மன்னிப்பு வேண்டிய அதிகமான்.

"நான் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும். மிகவும் இன்றியமையாத கடமை இருந்தது. அதனால் கவனிக்காமல் இருந்துவிட்டேன். நான் செய்தது எவ்வளவு பெரிய பிழை என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன். தாங்கள் வந்திருப்பதுஎனக்குத்தெளிவாகத் தெரியாது. தெரிந்திருந்தால்அப்போதேவந்திருப்பேன்." - அவன் உண்மையில் மனம் குழைந்து மன்னிப்பு வேண்டினான், அழாதகுறைதான்.

ஒளவையார் உண்மையை உணர்ந்தார். அவர் வந்திருப்பதை யாரும் தெரிவிக்காதபோதுஅவனைக் குறை கூறிப் பயன் என்ன? அவர் சினம் தணிந்தார். அதிகமான் அவரை உள்ளே அழைத்துச் சென்றான். சிறந்த இடத்தில் இருக்கச் செய்து அன்புடன் உரையாடினான்.

ஒளவையார் சினம் மாறியதோடுஅதிகமானுடையபண்பையும்உணரத்தொடங்கினர். இரண்டு நாட்கள் தங்கி விடை பெற்றுக்கொண்டார். "அடிக்கடி வந்து தமிழின்பத்தை நான் நுகரும்படி செய்ய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான் அதிகமான்.

ஒளவைக்கு பரிசில் தராமல் காலம் தாழ்த்தினான்

அவ்வை ஒரு முறை அதியனைக்காணச்சென்றார்.  பல நாட்கள் அதியனின்அரண்மனையில்விருந்தினராய் இருந்தார்.

அதியன் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினான். ஒளவையார் மீது கொண்ட பேரன்பால் பரிசில் கொடுத்து விட்டால் அவர் தன்னைப் பிரிந்து சென்று விடுவார் என்று எண்ணியே காலம் தாழ்த்தினான்.

ஒளவையார் 'ஒரு நாள் பழகினாலும் பலநாள் பழகினாலும் முதல் நாள் போலவே என்றும் அன்பு செலுத்துபவன் அதியன். அவன் பரிசில் தராவிடினும் யானையின் கொம்பிடை வைத்த உணவு எப்படி யானைக்குத்தப்பாதோஅதுபோலத் தப்பாமல் அவனது பரிசில் நமக்குக்கிட்டும். மனமேவருந்தாதே. அவன் வாழ்க' என வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்.

இதனைக்கேள்வியுற்ற அதியன் ஓடோடி வந்து ஒளவையாரிடம்மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பரிசிலைக் கொடுத்தான்.

அந்த நெல்லி மரம்

நெடுமான்அஞ்சியின் நாட்டில் கஞ்சமலை என்ற மலை ஒன்று உண்டு. பல மருந்துச் செடிகள் உள்ளது அது; முனிவரும்சித்தரும் நாடி மருந்துக்குரியமூலிகைகளைத்தேடிப் பெறும் சிறப்புடையது. அங்கே ஓரிடத்தில் நெல்லி மரம் ஒன்று இருந்தது. அது எங்கும் காணுவதற்கரியசிறப்பை உடையது; பல ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்க்கும் தன்மை பெற்றது. மருத்துவர்கள் அதன் பெருமையை உணர்ந்து அதிகமானிடம் சொல்லியிருந்தார்கள்.

"அந்த மரம் காய்த்துப்பழுப்பது அரிது. காய்கள் பிஞ்சிலேஉதிர்ந்துவிடும். ஒன்று இரண்டு காய்கள் முற்றி விளைந்தால் அவற்றை அமுதம்போலப் பாதுகாக்க வேண்டும். அந்த நெல்லிக்கனியைஉண்டால்நெடுநாளைக்குவாழலாம்" என்று சொன்னார்கள். "அத்தகைய மரத்தை நாம் பாதுகாப்பது நல்லது" என்று எண்ணி அதிகமான் அதற்குக்காவலாளரை அமைத்தான். பல காலமாகியும் அது காய்ப்பதாகவே தெரியவில்லை.

அந்த மரத்தில் இப்போது பிஞ்சுகள்தோன்றின. அதிகமான் அதைப்போய்ப் பார்த்துவிட்டு வந்தான். ஆனால் மருத்துவர்கள் சொன்னது போல் பிஞ்சுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வந்தன. "ஒரு காயாவதுகனிந்தால்அரசருக்குப் பயன்படும். அவர் ஒருவர் நீடுழி வாழ்ந்தால் எத்தனையோ பேருக்கு நலம் உண்டாகும்" என்று சான்றோர் கூறினர்.

அந்த நாள் வந்தது

காலம் போய்க்கொண்டிருந்தது; பிஞ்சுகளும் உதிர்ந்து கொண்டே இருந்தன; சில, பெரிய பிஞ்சுகளாகமுதிர்ந்தன; அவற்றிலும் சில உதிர்ந்தன. கடைசியில் சொல்லி வைத்தாற்போல ஒரே ஒரு காய் தான் மிஞ்சியது; பருத்தது; நன்றாகக்கனிந்தது.

ஒன்றாவது கிடைத்ததே என்று பெருமக்கள் உவகை அடைந்தனர். அந்தக் கனி அதிகமானுக்குத்தான் உரியது என்பதில் யாருக்கும் ஐயம் உண்டாகவில்லை. ஒரு நல்ல நாளில் அதைப் பறித்து இறைவன் திருமுன் வைத்து வணங்கி உண்ண வேண்டும் என்று ஏற்பாடு ஆகியிருந்தது.

அந்த நாள் வந்தது. கனியைப் பறித்து வந்து இறைவன் முன் வைத்து வழிபட்டார்கள். அதிகமான் இறைவனை வணங்கி ஓர் இருக்கையில் சென்று அமர்ந்தான். நெல்லிக்கனியை ஒரு பொற்றட்டில் ஒரு மங்கை ஏந்தி அவனிடம் கொண்டு வந்தாள்.

ஒளவையார் தட்டி சென்ற நெல்லிக் கனி

அந்தச் சமயத்தில் ஒளவையார் அங்கே வந்து சேர்ந்தார். அவரை வரவேற்றான் அதிகமான். அந்த இளம் பெண் நெல்லிக்கனியை ஏந்திக்கொண்டு அருகில் நின்றாள். ஒளவையார் நல்ல வெயிலில் நடந்து வந்திருந்தார். "என்ன கடுமையான வெயில்!" என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார். உடனே ஒருவர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அதை அருந்திய அவர் அந்த இளம் பெண் கையில் பொன் தட்டை ஏந்திக் கொண்டு நிற்பதைக்கண்டார். "என்ன அது?" என்று கேட்டார் ஒளவையார்.

"நெல்லிக் கனி" என்று அதிகமான் கூறினான்.

"நெல்லிக்கணியா? இந்த வெயில் காலத்தில் தாகம் தீர்க்கஉதவுவதல்லவா அது? நான் வரும் வழியில் ஒரு நெல்லிக்காயாவதுகிடைக்காதா என்று ஏங்கினேன். நாக்கு அப்படி வறட்டியது."

"அப்படியா? இந்த நெல்லிக்கனியைஉண்ணலாமே!” என்றான் அதிகன்.

அருகில் இருந்தவர்கள் துணுக்குற்றார்கள். ஒளவையார் அதைக் கவனிக்கவில்லை. அதிகமான் கூறியதற்கு, "உண்ணலாம்'"என்று விடை கூறினார். அதிகமான் மறு பேச்சுப் பேசவில்லை. தட்டில் இருந்த நெல்லிக்கனியை எடுத்தான். ஒளவையாரின் கையிலே கொடுத்தான். அவர் அதை வாயிலிட்டுத்தின்னத்தொடங்கினார்.

அங்கே இருந்தவர்களுடையஉள்ளத்தில் எத்தனையோ விதமான எண்ணங்கள் எழுந்தன. 'இவள் எங்கேயடா இப்போது வந்து சேர்ந்தாள்!' என்று சிலர் பல்லைக் கடித்தார்கள். 'இவன் இதன் அருமையைச் சொல்லாமல் இப்படிச் செய்யலாமா?' என்று அவன் மீது சினம் கொண்டார்கள்.

"நெல்லிக் கனி ஒரு புதிய சுவையுடன்இருக்கிறதே! இது போன்றதொன்றை நான் கண்டதே இல்லை” என்று ஒளவையார் மென்று கொண்டே சொன்னர்.

"ஆமாம்; இது புதிய கணிதான்" என்றான் அதிகமான்.

பதறிய ஒளவையார்

அதற்குள் அங்கே அமர்ந்திருந்த பெரியவர் ஒருவருக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை. "நம் அரசனுக் காகத்தவஞ் செய்து பெற்ற கனி அது" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டார்.

"இதில் ஏதோ சிறப்பிருக்கிறதுபோலிருக்கிறதே!" என்று ஒளவையார் அங்கே இருந்தவர்கள் முகத்தைப் பார்த்தார். ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டதென்ற செய்தியை அவர்கள் முகங்கள் தெரிவித்தன.

ஒளவையார், "ஏதோ ஒரு புதுமை இக்கனியில் இருக்கிறது. நீ உண்ண வேண்டியதை நான் உண்டுவிட்டேன் என்று தெரிகிறது. உண்மையை ஒளிக்காமல் சொல்லவேண்டும்" என்று அதிகமானைக் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்று பெரியவர் முன் வந்தார்; கதையையெல்லாம் சொல்லி முடித்தார்.

அப்போதுதான் ஒளவையார், அவசரப்பட்டுத் தாம் செய்த செயலின் விளைவை உணர்ந்து இரங்கினார். "அப்படியா? நான் என்ன காரியம் செய்து விட்டேன்! பல காலம் வாழவேண்டியஉனக்குக் கிடைக்க வேண்டியதை நான் இடையிலேதட்டிப்பறிப்பதற்காகவா வந்தேன்?" என்று துயரம் விம்மும்குரலோடு கேட்டார்.

உலகம் அரசர்களால் வாழ்வதில்லை

அதிகமான் புன்முறுவல் பூத்தான்; "தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் திருவுள்ளத்தின்படியே யாவும் நடக்கும். நான் எத்தனை காலம் வாழ்ந்தால் என்ன? சில போர்களைச் செய்வேன்; பலரைமடியச் செய்வேன். உலகம் அரசர்களால்வாழ்வதில்லை;

அறிவு சிறந்த சான்றோர்களால்வாழ்கிறது. தங்களைப் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்தால் உலகம் நன்மையைஉணரும்; நேர்மை வழியை உணரும்; கவிதை விருந்தைநுகரும். இந்த அரிய கனி எங்கே போய்ச்சேரவேண்டுமோ, அங்கேதான் போய்ச்சேர்ந்திருக்கிறது" என்றான்.

ஒளவையாருக்குஅதிகமானிடம் உண்டான மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது. ‘இவன் தெய்வப் பிறவி' என்று மனம் குளிர்ந்து வாழ்த்தத்தொடங்கினார்.

அதியர் குலத்தில் வந்த கோமானே, நீ வாழ்க

"அருமையான நெல்லிக்கனி அதை உண்டால் என்றும் இறவாமல் இருக்கலாம் என்று தெரிந்தும் அதை நீ உண்ணாமல்,

அச்செய்தியை எனக்கு சொல்லாமல் நான் என்றும் இறவாமல் இருக்க வேண்டும் என்று எனக்கு ஈந்தனையே அதியர் கோமான் அஞ்சி!

நீ ஆலகாலவிடத்தை தன் மிடற்றில் அடக்கி உலகை உய்ய வைத்த சிவனைப் போல சிறப்பாயாக"

 

ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமனி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

 

-புறம்

"அந்தக் கனியைவிடஇந்தப் பாடல் இனிமையாக இருக்கிறது. அதை உண்டால் இந்த நாற்ற உடம்பு ஒருகால் நெடிதுவாழலாம், ஆனால் இந்தப்பாடலைப்பெற்றமையால் என் புகழுடம்புசாவாமல் வாழும்" என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினான், அதிகமான் நெடுமான் அஞ்சி.

அதுமுதல் ஒளவையார் உள்ளத்தில்ஏறிக் கொண்டான் அதிகமான். அவர்களிடையே இருந்த நட்பு வலிமை பெற்றது."நான் உங்கள் தம்பி போன்றவன். எனக்குத் தமக்கை யாரும் இல்லை. உங்களையே அவ்வாறு கொள்கிறேன்" என்று பணிந் தான் அதிகமான். ஒளவையாரும்உடன்பிறந்தானை விட மிக்க அன்போடு அவனிடம் பழகலாயினர்.

நீண்ட காலம் வாழச்செய்யும்நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் ஒளவைக்குஈந்தான்அதிகன் என்ற செய்தி நாடு எங்கனும்பரவியது. புலவர்கள்அவனைப்பாராட்டும்போதுநெல்லிக்கனிவழங்கியபெருஞ்செயலைப்போற்றிப்புகழ்ந்தார்கள்.

காரி - ஓரி மோதல்கள்

திருக்கோவலூரில்காரி என்ற வள்ளல் இருந்தான். அவன் முடியுடைமன்னர்களுக்குப் போரில் துணையாகச் சென்று போரிட்டு வெற்றிபெற வைக்கிறவன். அக்காலத்தில் சேர நாட்டை ஆண்டிருந்தவன்பெருஞ்சேரல்இரும்பொறை என்ற சேரன். அவனுக்குக்கொல்லிமலையைத் தன் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவா இருந்தது. கொல்லிமலையைச் சார்ந்த ஒரு பகுதியை ஓரியென்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன்மேல் போர் தொடுக்க விரும்பிய சேரன், காரியைத் தன் படைக்குத் துணையாக வரும்படி ஆள் விட்டு அழைத்தான். காரிசேரமானைப்போய்ப்பார்த்துப் பேசினான். "ஓரி சிறிய நாட்டுக்குத் தலைவன். அவனோடு போரிட நீங்கள் போகவேண்டியதில்லை. நான் என்னுடன் இருக்கும் வீரர்களுடன் சென்று அவனை வென்று வருகிறேன்" என்றான். பெருஞ்சேரல்இரும்பொறை அப்படியே செய்யலாம் என்று ஒப்புக்கொண்டான்.

உடனே காரிஒரியின்மேல் போர் தொடுத்தான். அப்போரில்ஓரி உயிர் இழந்தான். அவனுடைய கொல்லிக்கூற்றத்தைக்காரிசேரமானுக்குவழங்கினான். அதிகமானுக்கும்ஓரிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு காரணமும் இல்லாமல் ஓரியின்மேல்படையெடுத்துஅவனைக்கொன்றகாரியினிடம்அதிகமானுக்குக் கோபம் மூண்டது. சேரமானுக்குக்கையாளாக இருந்தே இப்படிக்காரிசெய்திருக்கிறான் என்பதை உணர்ந்தபோதுஅதிகமானுக்குச் சினம் முறுகியது. சேரமானுக்கும்அவனுக்கும்வழிவழியே பகைமை இருந்து வருகிறதல்லவா?

அதிகமான் – காரி மோதல்கள்

அதிகமான் காரியைத் தொலைக்க வேண்டுமென்று கருதி அவன் வாழ்ந்த திருக்கோவலூரின்மேற்படையெடுத்தான். போர் நிகழ்ந்தது. காரி பெரிய வீரன்; அவனிடம் வீரம் மிக்க பல வீரர்கள் இருந்தார்கள். என்றாலும் அதிகமானுடையபடைவலிக்கு முன் காரியின் படை நிற்க முடியவில்லை; தோல்வியையே கண்டது. தான் எதிர்சென்று நின்று போர்செய்தால் அதிகமான் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சியகாரிபோர்க்களத்திலிருந்துஓடிவிட்டான். நேரே வஞ்சி மாநகர் சென்று தனக்கு நேர்ந்த கதியைச் சொன்னான்.

சேரன் பெருஞ்சேரலிரும்பொறை

பெருஞ்சேரலிரும்பொறைகாரிக்கு ஆறுதல் கூறினான். "இதுவும் நல்லதாகப் போயிற்று. அதிகமானைப் பூண்டோடு அழிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவனை அழித்து உனக்கு மீட்டும்திருக்கோவலூரை உரிமையாக்குகிறேன்" என்றான் சேரமான். அன்று முதலே போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச்செய்யத் தொடங்கினான். காரியும் தன்னுடன் ஓடிவந்த வீரர்களைத் தொகுத்து ஒரு சிறிய படையாகஅமைத்துக்கொண்டான். தக்க படைப் பலம் இருக்கிறது என்ற நம்பிக்கை தோன்றியவுடன் போர் முரசு கொட்டினான்சேரன். அதிகமான் அதற்கு அஞ்சவில்லை. சிங்கக்குட்டியைப்போலத்துள்ளிக்குதித்தான். அவனுடைய கோட்டை மிகவும் வலிமையுள்ளது. பகைவர்களால்அழிப்பதற்கரியது. கோட்டைக்குள்ளிருந்துபுறத்தே செல்வதற்கு இரகசியமானசுரங்க வழி ஒன்று இருந்தது. பகைவர்கள் நெருங்கும்போது அதன் வழியே யாரும் அறியாமல் வெளியிலேசென்றுவிடலாம்.

அதிகமான் வெளியே வந்து போர் செய்வதை விரும்பவில்லை. கோட்டையைத்தக்கபடி பாதுகாத்து வாயில்களை இறுக மூடி உள்ளே இருந்தாலே போதும் என்று எண்ணினான். கோட்டைக்குள்ளே புக இயலாமல்சலித்துப்போய்ப் பகைவர்கள் போய்விடுவார்கள் என்று அவன் எதிர்பார்த்தான்.

சேரன் படை அதிகமான் கோட்டையை முற்றுகையிட்டது

சேரன் படை அதிகமான் கோட்டையைமுற்றுகையிட்டது. அதிகமான் வெளியே வரவில்லை; கோட்டையைமூடிவிட்டு உள்ளே இருந்தான். சில நாட்கள் சென்றன. உள்ளே இருப்பவர்களுக்கு உணவு குறைந்துவிட்டால் தானே கோட்டைக்கதவுகளைத் திறந்து வெளியே வந்துவிடுவான் என்று சேரமான் எதிர்பார்த்தான்.

அதிகமானேகோட்டைக்குள் இருந்த சுருங்கை வழியாகச்சிலரை அனுப்பி உணவுப் பண்டங்களைக்கொண்டுவரச் செய்தான். அதனால் எத்தனை காலமானலும்உணவுக் குறை இன்றிக்கோட்டைக்குள்அதிகமானும்அவனைச்சேர்ந்தவர்களும் இருக்கமுடியும். இந்த இரகசியம் சேரமானுக்குத் தெரியாது. 'இவ்வளவு காலத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எப்படி அவன் இந்தக்கோட்டைக்குள் சேமித்து வைத்திருக்கிருன்!' என்றே வியப்படைந்தான். அதிகமானுடைய ஊழ்வினை பொல்லாததாக இருந்தது. அவன் அரண்மனை அந்தப்புரத்தில் துணி வெளுத்துவந்த ஒரு பெண் இப்போது கோட்டைக்கு வெளியே ஊருக்குள் இருந்தாள்.

சில காரணங்க்களால்,அதிகமானிடம் இவளுக்கு இருந்த இருந்த வெறுப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. அவள் சேரமான்படைத் தலைவன் ஒருவனிடம்சுரங்கவழியைப்பற்றிச் சொன்னாள்.

அதனைத்தெரிந்துகொண்ட அவன் முதல் வேலையாக அந்த வழியை அடைத்துவிட்டான். அதிகமான் குகையுள்அகப்பட்டசிங்கம்போலஆயினான்.

கோட்டைக் கதவுகள் திறந்தன

வேறு வழியில்லாமல்கோட்டைக்கதவுகளைத் திறந்து கொண்டு வெளியிலே போர்க்களத்தில் குதிக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது. போர் கடுமையாக மூண்டது.

வைரமேறியதோளும்உரமேறியஉடம்பும்உறுதியேறியஉள்ளமும்படைத்தவர்கள்அதிகமானுடையபடைவீரர்கள். அவர்களை எளிதில் அடக்க முடியும் என்றிருந்தான்சேரமான். அது நடவாது என்பதை இப்போது உணர்ந்து கொண்டான்.

தன் படைத்தலைவர்களுக்குஊக்கமூட்டினான்பெருஞ்சேரலிரும்பொறை. யானையும்யானையும் மோதின. குதிரையும்குதிரையும்பொருதன. வில்லிலிருந்துஅம்புகள்சோனாமாரியாகப்பொழிந்தன. வாளைப் பலர் வீசினர்; வேலை ஓச்சினர். யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்று தெளிய முடியாமல் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. கடைசியில் அளவிலே மிகுதியாக இருந்த சேரன்படைமுன்னேறியது.

வள்ளலின் முடிவும் புலவர்களின் புலம்பலும்

இறுதியில் அதியமான் படை தோற்றது. ஒரு வீரன் எறிந்த வேல் மார்பிலேபாய அதிகமான் வீழ்ந்தான். அவன் வீழ்ச்சியைக் கண்டு சேரன்படையினர்ஆரவாரித்தார்கள்.

அதியமான் மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின்நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்குஅளிப்பவர்தாம்யாரிக்கிறார்கள்? என்று.

இரப்போர்கையுளும்போகிப்
புரப்போர்புண்கண் பாவை சோர
அஞ்சொல்நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத்தியங்கியவேலே
ஆசாகெந்தையாங்குலன்கொல்லோ
இனிப்பாடுநருமில்லை
பாடுநர்க்குஒன்றீகுநருமில்லை

---- புறம்

பெருஞ்சேரல்இரும்பொறை, போர்க்களத்தில் மாண்டு கிடந்த அதிகமானக் கண்டான். அவன் நெஞ்சு நடுங்கியது. அதிகமான் புகழைப்புலவர்கள்பாடியபாடல்களினால்உணர்ந்தவனாதலின் அவனுக்கே அவன் உயிரற்ற உடலைப்பார்க்கப்பொறுக்கவில்லை.

புலவர்கள்பாட்டால் அழுது புலம்பினர்கள். அதிகமானை எரித்து அங்கே நடுகல்லை நட்டு வீரர்கள் வழிபட்டார்கள். அந்த நடுகல்லைத்தெய்வமாகப் பின் வந்தவர்கள் கும்பிட்டு வணங்கினார்கள்.

ஈகையினாலும்வீரத்தாலும் சிறந்து நின்ற அதிகமான் இன்றும் பழம் பாடல்களில்மாயாமல் நிலைத்து நிற்கிறான்.

அதிகமான் பற்றி அவ்வை பாடிய சில பாடல்கள்

பாடியவர் : அவ்வையார்.
பாடப்பட்டோன் : அதியமான் நெடுமானஞ்சி.
திணை : தும்பை.
துறை : தானை மறம்.

களம்புகல்ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும்உளன்ஒருபொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்தகால்அன்னோனே.

பாடலின் பின்னணி: 

ஒரு சமயம், அதியமான் நெடுமான்அஞ்சியின் பகைவர்கள் ( மூவேந்தர்கள், குறுநிலமன்னர்கள் ) தங்கள்வலிமையைஎண்ணிஇறுமாந்துஅவனோடுபோர்செய்யத்திட்டமிட்டனர். அதைஅறிந்தஅவ்வையார்அவர்களிடம்சென்றுஅதியமானின்வலிமையைப்புகழ்ந்துகூறிப்போர் செய்வதைத் தவிருங்கள் என்று அறிவுரை கூறுவதைஇப்பாடலில் காணலாம்.

பொருள்:

ஒவ்வொரு நாளும் எட்டுத்தேர்களைமுழுமையாகச் செய்யும் ஆற்றல் மிக்க தச்சன் ஒருவன் தேர்க்கால் (தேர்ச்சக்கரம்) ஒன்றுக்கு மட்டும் ஒரு மாத காலம் செலவிட்டு முயன்று செய்த தேர் பெற்றிருக்கும் வலிமை போல வல்லமை மிக்க ஒரு போராளி எங்களிடமும் இருக்கிறான். எனவே, பகைவர்களே! அவனை எதிர்த்துப் போர்களம்புகுவதைத்தவிர்த்துவிடுங்கள்.

----------------------------------------------------------

. . .தொண்டைமானின்மாளிகையில்அவ்வைக்கு மிகுந்த மரியாதை.. ! அவள் தமிழைவளர்ப்பவள்அல்லவா? தமிழ் நேசம் மிக்கோர் யார் அவரை வெறுக்க முடியும்? தான் வந்த நோக்கத்தை அவ்வை உரைக்கவும்  இல்லை, தொண்டைமான் வினவவும் இல்லை. ஆனால் அவனுக்கு அவ்வையார்தூதுவந்திருக்கிறார் என்று தெரியும்.

எனவே தன் படைபலத்தைஅவ்வைக்கு காட்டி இதன்மூலம் அதியமானை மறைமுகமாக எச்சரிக்க தொண்டைமான் விரும்பினான். எனவே'படைகலங்களைகாணவருக' என அவ்வைக்கு அழைப்பு விடுத்தான்.. அவ்வையும்மறுக்காமல் ஏற்றார்.

அங்கே படைக்கலத்திலே ஆயுதங்கள் வரிசையாக அடுக்கி வைக்கபடிருந்தன. எல்லாஆயுதங்களும் புதிதாக நெய் தடவி, மயில் பீலியும் பூ மாலையும்கொண்டுஅலங்கரிக்கப்பட்டுபூஜைக்குவைக்கப்படிருந்தன. இதை அவ்வையாருக்கு காட்டி தன் படையின் பலத்தை பூடகமாக உணர்த்தினான்..!

அவ்வைக்கு அவன் கர்வம் புரிந்தது.உடனே வஞ்சப்புகழ்ச்சியில் ஒரு பாடலைபாடினார்.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள்நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடைவியன்நகரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொல்துறைக்குற்றிலமாதோ; என்றும்
உண்டாயின்பதம்கொடுத்து
இல்லாயின்உடன்உண்ணும்
இல்லோர்ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதிவேலே.

 

திணை: பாடாண் திணை. (ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச்சிறப்பித்துக் கூறுவது.)
துறை: வாண் மங்கலம். (அரசனுடையவாளைப் புகழ்தல்.)

பொருள் :

செல்வம் இருந்தால் மற்றவர்களுக்குஉணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும், செல்வம் இல்லையானால் (குறைந்தால்) தன் உணவைப்பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின்தலைவனாகியபெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின்...

“இங்கே ஆயுதங்கள் எல்லாம் பூவாலும் மயில் பீலியாலும்அலங்கரிக்கப்பட்டு நெய் தடவி புதிதாகஉள்ளன. ஆனால் அதியமானின்படைக்கலத்திலே காட்சி இப்படி இல்லை. அவன் ஆயுதங்கள்எல்லாம்பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்களின் கிழிந்தசதைகள் ஒட்டி நிறம் மாறி கூர் மங்கிகொல்லனிடத்தில் சரிசெய்ய வைக்கப்பட்டுள்ளன.."

அவ்வையின் இந்த பாடல் மூலம் அதியமானின் வீரத்தை உணர்ந்து அவ்வைக்கு உயர்ந்த மரியாதைகளை செலுத்தி வழியனுப்பினான். அத்துடன்போரிடும் எண்ணமும் விட்டு அதியமானுடன் நட்பு பாராட்டினான்.

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.