கடையேழுவள்ளல்களில் ஒருவன்பேகன், இவனது மனைவியின் பெயர் கண்ணகி ஆகும். சிலப்பதிகாரக்கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான்.
இவர்களை ஒன்று சேர்க சங்க கால புலவர்கள்முயன்றதை இந்த பதிவில்பார்போம்.
கண்ணகியின் ஊடல்
இவ்வாறு புகழ்பெற்றபேகன்ஆடல் கலையில் வல்ல ஒரு விறலியின்ஆட்டத்திலும்பாடலிலும் அவன் ஈர்ப்பு கொண்டான். அதனால் மற்றக்காரியங்களைக்கூடமறந்திருந்தான். அந்த விறலியும் சில காலம் ஆவிநன்குடியில்தங்கியிருந்தாள்.
இது சம்பந்தமாகக்கண்ணகிக்குத் தன் கணவன்மேல் ஐயம் உண்டாயிற்று. அதனால் கண்ணகிக்கு கோபமும் எழுந்து. எப்படியோ அந்தச் சிறிய ஊடல் பெரிதாக வளர்ந்துவிட்டது. இதை பற்றி விளக்கம் கேட்ட கண்ணகியை பேகன் ஒரு மாளிகைக்கு அனுப்பி அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டான். அவள் உணவு உடை முதலியவற்றைப் பெற ஏற்பாடுகள் செய்தான். ஆனால் அவளைப்போய்ப்பார்க்கவில்லை.
இந்தச் செய்தி முதலில் யாருக்கும் தெரியாது. பிறகு மெல்ல மெல்லப்பேகனுடையஉறவினருக்குத் தெரிந்தது.
கண்ணகி தன் கணவனுடையசினத்துக்குஆளாகித்தவித்தாள். அவளுக்குப்பேகனுடைய அன்பு இனிக்கிடைக்குமோ என்ற ஏக்கம் வந்து விட்டது. வாழ்க்கையே குலைந்துவிட்டதாக எண்ணி உறுகினாள்.
பேகனிடம் கூறி அவன் சினத்தை மாற்ற வேண்டும் என்று அவனுடன் பழகுகிறவர்கள் யாவரும் நினைத்தார்கள். ஆனால் அவனுக்கு நல்லுரை கூறும் துணிவு யாருக்கும் உண்டாகவில்லை. பேகனுடன் நெருங்கிப் பழகும்புலவர்களைக் கொண்டு தான் இந்தக்காரியத்தைச்சாதித்துக் கொள்ள வேண்டும் என்று சில அன்பர்கள் எண்ணினார்கள்.
பேகன் மனைவி கண்ணகிபிரிவை பற்றி புலவர்கள்பாடல்கள்
ஒரு சமயம் பரணர் வந்தார்; அவருடன் கபிலரும் வேறு சில புலவர்களும் வந்தார்கள். பரனரை நன்கு அறிந்திருந்தவரும்பேகனுடையநண்பருமாகிய ஒருவர் அப்புலவரைத் தனியே சந்தித்து நிகழ்ந்ததைச்சொன்னர்; எப்படியாவது கண்ணகியைமீட்டும்பேகனோடுவாழும்படி வகை செய்யவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
பரணர் அதைப் பற்றி மேலும் விசாரித்துத்தெரிந்துகொண்டார். தாம் ஒருவராக நின்று பேகன் மனத்தை மாற்றுவதைவிடக் கபிலர் முதலிய மற்றப்புலவர்களையும்துணையாகக் கொண்டு அவனை இரங்க வைக்கலாம் என்று எண்ணினார். அந்தப் புலவர்களிடம் தம் கருத்தைச்சொன்னர். இன்னது செய்வதென்று அவர்கள் தங்களுக்குள் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டார்கள்.
பரணரின்பாடல்
ஒரு நாள் காலை பரணர் தனியே சென்று பேகனைக்கண்டார். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது முதல் என் உள்ளம் அங்கேயே இருக்கிறது” என்றார் புலவர்.
“என்ன அது?” என்று கேட்டான் வள்ளல். “நானும் என்னைச்சேர்ந்தவர்களும்உன்னையும் உன் மலையையும் பாராட்டும் பாடல்களை ஓரிடத்திலேபாடிக்கொண்டிருந்தோம். அப்போது யாரோ விம்மி விம்மி அழும் குரல் கேட்டது.”
“அழுகையா? யார் அழுதார்கள்?”
பாடியவர்:பரணர்
பாடப்பட்டோன்:வையாவிக்கோப்பெரும்பேகன்.
திணை:பெருந்திணை.
துறை:குறுங்கலி.
அருளாயாகலோகொடிதே; இருள்வரச்,
சீறியாழ்செவ்வழி பண்ணி யாழ நின்
கார்எதிர் கானம் பாடினேமாக,
நீல்நறுநெய்தலிற்பொலிந்தஉண்கண்
கலுழ்ந்து, வார்அரிப் பனி பூண்அகம்நனைப்ப,
இனைதல் ஆனாளாக, இளையோய்!
கிளையை மன், எம்கேள்வெய்யோற்கு?என,
யாம்தன்தொழுதனம்வினவக், காந்தள்
முகைபுரைவிரலின் கண்ணீர் துடையா,
யாம், அவன் கிளைஞரேம்அல்லேம்; கேள்,இனி;
எம்போல் ஒருத்தி நலன்நயந்து, என்றும்,
வரூஉம்என்ப; வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லெனஒலிக்கும்தேரொடு,
முல்லை வேலி, நல்லூரானே!
- புறம் 144
பொருள்
பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியோடுவாழ்வதைக்கேள்வியுற்ற பரணர், இப்பாடலில்பேகனுக்கு அறிவுரை கூறுகிறார்.
மாலைநேரத்தில் இருள் வந்ததால் சிறிய யாழை இசைத்து உன் மழைவளம் மிகுந்த காட்டைசெவ்வழிப்பண்ணில் பாடினோம். அப்பாட்டைக்கேட்டவுடன்,
நீல நிறமும் மணமும் உடைய ஆம்பல் மலர் போன்ற மை தீட்டியகண்களுடைய பெண் ஒருத்தி கலங்கி விட்டுவிட்டுஉகுத்தகண்ணீர்த்துளிகள் அவள் அணிகலன்களைநனைத்தன. அவள் வருந்தி அழுதாள்.
ஆகவே, நாங்கள் “இளம்பெண்ணே! நீ எங்கள் நட்பை விரும்புபவனுக்கு (பேகனுக்கு) உறவினளோ?” என்று வணங்கிக் கேட்டோம்.
அவள் காந்தள் மொட்டுப் போன்ற தன் கை விரல்களால் கண்ணீரைத் துடைத்து, “ நான் அவனுடைய உறவினள் அல்ல; கேள்! இப்போழுது, என் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி, புகழ் மிக்க பேகன் ஒலிக்கும்தேரில்முல்லையைவேலியாக உடைய நல்லூருக்குஎந்நாளும்வருவதாகக் கூறுகிறார்கள்”
என்று கூறி அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடிது என்றான்.
பாடியவர்:பரணர்
பாடப்பட்டோன்:வையாவிக்கோப்பெரும் பேகன்.
திணை:பெருந்திணை.
பெருந்திணை. பொருந்தாத காமநிலையைபற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை:குறுங்கலி. 'பரணர் பாட்டு' எனவும் கொள்வர்.
மடத்தகைமாமயில்பனிக்கும் என்று அருளிப்
படாஅம்ஈத்தகெடாஅநல்லிசைக்,
கடாஅயானைக்கலிமான்பேக!
பசித்தும்வாரோம்; பாரமும்இலமே;
களங்கனியன்னகருங்கோட்டுச்சீறியாழ்
நயம்புரிந்துறையுநர்நடுங்கப் பண்ணி,
அறம்செய்தீமோ, அருள்வெய்யோய்! என,
இதியாம்இரந்த பரிசில்: அது இருளின்,
இனமணிநெடுந்தேர் ஏறி,
இன்னாதுஉறைவிஅரும்படர்களைமே!
- புறம் 145
பொருள்
பரணர் பாடியதைக் கேட்ட பேகன் அவருக்குப் பரிசில் அளிக்க முன்வந்தான். அதைக் கண்ட பரணர்,
மென்மையான இயல்பும் கருமை நிறமும் உடைய மயில் ஒன்று குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி அம்மயிலுக்குப் போர்வை அளித்தவனே! குறையாதபுகழும்மதமுள்ளயானைகளும்செருக்குடையகுதிரைகளும் உடைய பேகனே! நான் பசியினால் வரவில்லை; எனக்குச்சுற்றத்தாரால் வரும் சுமையும் இல்லை.
களாப்பழம் போன்ற கரிய தண்டையுடை ய சிறிய யாழுடன், இசை நயம் தெரிந்தோர்தலயைசைத்துக் கேட்குமாறு “ அறம் செய்க; அருளைவிரும்புபவனே” என்று பாடி உன்னிடம் பரிசிலாகக் கேட்பது என்னவென்றால் ”நீ இன்று இரவே நிறைந்த மணிகளுடைய உயர்ந்த தேரில்ஏறிப்போய் துயரத்துடன் வாழ்பவளின் (உன் மனைவி கண்ணகியின்) துன்பத்தைக்களைவாயாக” என்பதுதான்.
பேகன் ஒன்றும் பேசவில்லை. புலவர் தம் கருத்தை ஒரு பாட்டாகவேபாடிவிட்டார். பேகன் சிந்தனையுள்ஆழ்ந்தான். “சரி, நான் போய் வருகிறேன்” என்று சொல்லி அவர் விடை பெற்றுக்கொண்டார்.
மறுபடியும் ஒரு பாட்டைப் பரணர் கூறினார். அதுவும் பாணன் பாடுவதாகவே இருந்தது. “மயில் நடுங்கு மென்று உள்ளம் இரங்கி மேலாடையைஉதவியபேகனே, நாங்கள் இப்போது உன்னை அணுகியதற்குக்காரணத்தைக் கேள். எங்களுக்குப் பசி இல்லை; தாங்க வேண்டிய குடும்பப்பாரமும் இல்லை.
இங்கே வந்து இசை பாடிப் பெற விரும்பிய பரிசில் ஒன்று உண்டு. அந்தப் பரிசிலை நீ அருளவேண்டும். நீ இப்போதே உன் தேரில் ஏறி, வருத்தத்தோடுஉறையும்அப்பெருமாட்டியின்துன்பத்தைக்களையவேண்டும்” என்று பாடினார்.
பேகன் காதில் அதுவும் விழுந்தது. அவன் முகம் நிமிர்ந்து பார்க்கவில்லை. சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்த பரணர், "நான் போய் வருகிறேன்" என்று விடைபெற்றுக்கொண்டார்.
அரிசில்கிழார்பாடல்
அன்று பிற்பகலிலும்பேகனை வேறு புலவர்கள்அணுகினார்கள். அரிசில்கிழார்சென்றார். அவரும்: பாணன் கூற்றாகவே பாடினார்;
பாடியவர்:அரிசில்கிழார்.
பாடப்பட்டோன்:வையாவிக்கோப்பெரும்பேகன்.
திணை:பெருந்திணை.
துறை:குறுங்கலி.
அன்னவாக; நின் அருங்கலவெறுக்கை
அவை பெறல்வேண்டேம்; அடுபோர்ப்பேக!
சீறியாழ்செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவையாயின், குரிசில் ! நீ
நல்காமையின்நைவரச்சாஅய்,
அருந்துயர்உழக்கும்நின்திருந்திழை அரிவை
கலிமயிற்கலாவம்கால்குவித்தன்ன,
ஒலிமென் கூந்தல் கமழ்புகைகொளீஇத்,
தண்கமழ் கோதை புனைய,
வண்பரிநெடுந்தேர்பூண்க, நின் மாவே!
- புறம் 146
பொருள்
பேகா! உன் செல்வங்கள்உன்னிடமே இருக்கட்டும். அவற்றைப் பெற நான் விரும்பவில்லை. என் யாழில்செவ்வழிப் பண் கூட்டி உன் நாட்டைப் பாடினேன். அதற்காக எனக்குப் பரிசில் தருவாயானால் உன் மனைவி தன் கூந்தலில் பூ சூடிக்கொள்ளும்படி அவளிடம் செல்ல உன் தேரில்குதிரைகளைப்பூட்டுக.
உன் மனைவி நீ உன்னை அவளுக்குத்தராமையால் நைந்துபோய் உடல் அழகு குலைந்து துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் தன் தாலி இழையைத்திருத்திக்கொள்ள வேண்டும்.
தோகைமயில் போன்ற தன் கூந்தலுக்குப்மணப்புகைஊட்டிப்பூவைச்ணூடிக்கொள்ள வேண்டும். அதற்காக உன் தேரைப்பூட்டுக. அதுவே நீ எனக்குத் தரும் செல்வமாக இருக்கட்டும் என்று கவி பாடினர்.
பெருங்குன்றுார்கிழார்பாடல்
அவர் போனபிறகு பெருங்குன்றுார்கிழார் வந்தார். அவரும் அதே போக்கில் பாடினார்.
பாடியவர்:பெருங்குன்றூர்கிழார்.
பாடப்பட்டோன்:வையாவிக்கோப்பெரும் பேகன்.
திணை:பெருந்திணை.
துறை:குறுங்கலி.
கல்முழைஅருவிப்பன்மலை நீந்திச்,
சீறியாழ்செவ்வழி பண்ணி வந்ததைக்,
கார்வான்இன்னுறைதமியள்கேளா,
நெருநல்ஒருசிறைப்புலம்புகொண்டுஉறையும்
அரிமதர்மழைக்கண், அம்மா அரிவை 5
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணூறுமணியின்மாசுஅறமண்ணிப்,
புதுமலர்கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர்கோவே!
- புறம் 147
பொருள்
கல்லுக்குகைகளில் அருவி கொட்டும் பல மலைகளைத் தாண்டி உன்னிடம் வந்துள்ளேன். என் யாழில்செவ்வழிப் பண் பாடிக்கொண்டுவந்துள்ளேன்.
ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வதுதான். நேற்று உன் இல்லம் சென்றபோது உன் மனைவி மழைக்கால மேகம் இடிமுழக்கத்தைக் கேட்டுக்கொண்டு தனியே இருந்தாள். கண்ணீரை அடக்கிக்கொண்டு இருந்தாள்.
கூந்தலில் எண்ணெய் வைக்காமல் இருந்தாள். அவள் தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப்புதுமலர்சூடிக்கொள்ளும்படி நீ அவளிடம் செல். அதுதான் நீ எனக்குத்தரவேண்டிய பரிசு.
கபிலரின் பாடல்
சிறிது நேரம் சென்றது. கபிலர் வந்தார். “இன்று ஒரு புதிய பாடல் பாடி வந்திருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். பேகன் சிறிதே தெளிவு பெற்று, “வாருங்கள், வாருங்கள்” என்றான். அவர் அமர்ந்தார். “அந்தப் பாடலை ஒரு பாணன் பாடியதாகப்பாடியிருக்கிறேன்” என்றார்.
“எங்கே சொல்லுங்கள், கேட்கலாம்.”
பாடியவர்:கபிலர்
பாடப்பட்டோன்:வையாவிக்கோப்பெரும் பேகன்.
திணை:பெருந்திணை.
துறை:குறுங்கலி.
மலைவான்கொள்கஎனஉயர்பலிதூஉய்
மாரி ஆன்றுமழைமேக்குஉயர்கஎனக்
கடவுட்பேணியகுறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
புனத்தினைஅயிலும் நாட! சினப்போர்க்
கைவள்ஈகைக்கலிமான்பேக,
யார்கொல்அளியள் தானே; நெருநல்
சுரன்உழந்துவருந்தியஒக்கல்பசித்தெனக்
குணில்பாய்முரசின்இரங்கும் அருவி
நளிஇருஞ்சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும்நின்மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம்நனைப்பவிம்மிக்
குழல்இனைவதுபோல்அழுதனள்பெரிதே.
- புறம் 143
பொருள்
மலைகளை மேகங்கள் சூழ்ந்து மழை பெய்க எனவும், மழை அதிகமாகப்பெய்தால் மேகங்கள் மேலே செல்லட்டும் என்றும் கடவுளை வாழ்த்தி உயர்ந்த பூக்களைத்தூவி வழிபட்டு, மழை நின்றதால் மகிழ்ச்சி அடைந்து மலைச் சாரலில் விளையும் தினையை உண்ணும் குறவர்கள் வாழும் நாட்டை உடையவனே!
சினத்தோடு செய்யும் போரையும், கைவண்மையால் கொடுக்கும் கொடையையும், செருக்குடையகுதிரைகளையும் உடைய பேகனே! நேற்று காட்டில் நடந்து வருந்திய என் சுற்றத்தினர்பசியுற்றனர். தடியால்அடிக்கப்பட்டமுரசின் ஒலி போல் முழங்கும்அருவியையுடைய பெரிய உயர்ந்த மலைஇடத்து உள்ள சிறிய ஊரின்வாயிற்புறத்து வந்து உன்னையும் உன் மலையையும்வாழ்த்திப் பாடினோம்.
அப்பொழுது, தான் துன்பத்தோடு வடிக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல், தன் மார்பகங்கள்விம்மிக்கண்ணீரால்நனையுமாறு புல்லாங்குழல் வருந்துவது போல் ஒரு பெண்மணி மிகவும் அழுதாள். அவள் இரங்கத்தக்கவள். அவள் யார்?
இவ்வாறு புலவர்களைபுறிந்து கொண்ட பேகன்,
மனம் இரங்கி கண்ணகியுடன் இணைந்த பேகன்
பெரும் புலவர்கள்சொல்வதைக்கேட்டும். மனம் இரங்காமல்இருப்பானாபேகன் ? அவன் தான் செய்த செயலுக்காக மிகவும் வருந்தினான்.
அன்றே தன் மனைவியைத் தானே சென்று அழைத்து வந்தான். மறுநாள் புலவர்கள்நால்வரையும்அரண்மனைக்கு வரச் செய்தான். தன் மனைவியையும் உடன் வைத்துக்கொண்டு அந்த நால்வரையும். வரவேற்று உபசரித்தான். கண்ணகி அப்புலவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.
சங்க கால தமிழர்களின் காதல் மற்றும் களவு – அகத்திணை