திருச்சிற்றம்பலம்
நமச்சிவாயவாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழிஆண்டகுருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்றுஅண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன்அநேகன் இறைவன் அடிவாழ்க5
பொருள்:
நமச்சிவாயவாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறைஆண்டருளும்குருவாகியமாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும்பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.
குறிப்பு:
- மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாகநமச்சிவாய என்ற
திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத்துவங்காமல்
வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது
அவருடைய பணிவன்பின் வெளிப்படை.
2. திருவாசகத்தில்சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற்பதிகத்திலேயேஅதனைப்
போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக்காட்டுவன.
வேதங்கள்இறைவனுடைய இயல்பு கூறுகின்றபோது,ஆகமங்கள்அப்பெருமானைஎவ்வகைஅடையலாம் என்பது பற்றி நமக்குக்காட்டுகின்றன. வேதங்கள்அறிவானால்ஆகமங்கள்
அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும்
வழி காட்டுவதாலும், ஆகமங்கள்இறைவனால்அருளிச்செய்யப்பட்டதாலும்இறைவனை,
“ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்” எனப்போற்றுகின்றார். -
இறைவன் ஒருவனே. (ஏகம் சத்– வேதம், ஒன்றே குலமும்
ஒருவனேதேவனும்– திருமந்திரம்). அவ்விறைவன்பசுக்களாகிய நாம் உய்வுறும்
பொருட்டு பலபலவேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.
2
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும்பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்வெல்க
புறத்தார்க்குச்சேயோன் தன் பூங்கழல்கள்வெல்க
கரம் குவிவார் உள் மகிழும்கோன்கழல்கள்வெல்க
சிரம் குவிவார்ஓங்குவிக்கும்சீரோன் கழல் வெல்க10
பொருள்:
என்னுடைய வேகத்தைப்போக்கிஆண்டுகொண்டமன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பினைநீக்குபவனாகியதலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள்வெல்லட்டும்.தன்னைவிடுத்துநிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள்வெல்லட்டும்.
கைகளைக் கூப்பி வழிபடுவார்உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடையகழல்கள்வெல்லட்டும்.
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்
பெருங்குணம்வாய்ந்தவனுடையகழல்கள்வெல்லட்டும்.
குறிப்பு:
- வேகம் கெடுத்தல் – துயரம் நீக்குதலைக்குறிக்கும். மனத்தின்வேகத்தையும்
(நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின்வேகத்தையும் குறைத்து
தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும்ஈசனின்கருணையையும்குறிக்கும்.
2. பிஞ்ஞகன்– பீலிஅணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.
(இறைவன் குரண்டாசுரனின்பீலியைஅணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)
3. சேயோன்– சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.
3
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார்பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
பொருள்:
எல்லாவற்றையும் உடைமையாகக்கொண்டவனின் திருவடி போற்றி.
எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
சிவன் எனப்பெறும்செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
அன்பினில்நிற்பவனானதூயவனின் திருவடி போற்றி.
மாயப்பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.
குறிப்பு:
- தேசு– ஒளி
4
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச்சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓயஉரைப்பன் யான் 20
பொருள்:
அடங்காத இன்பம் அருளும்கருணையின் மலை போன்றவனுக்குபோற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில்பெருங்கருணையால்வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளேதுணையாகக்கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச்சொல்லுகின்றேன்.
குறிப்பு:
- “சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
என்ற இவ்வரிகள்அன்பினால் நிறை நிற்கின்றஅடியவர்க்குமட்டுமல்லாது தத்துவம்
விரும்புவோருக்கும்பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து,
“இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்.” கட்டுண்டுதவிக்கும்பசுக்களாகிய நம் எல்லா
உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க.
அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத்தொழுவதற்கும்அப்பெருமானுடையஅருளையே
துணையாகக்கொண்டாலேயே அது முடியும்.
(அருளே துணையாக … அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே– சம்பந்தர்)
5
கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்குஎட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும்மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லாவினையேன்புகழும் ஆறு ஒன்று அறியேன் 25
பொருள்:
நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண்காட்டியதால் இங்கு வந்தேன்.
சிந்தனைக்குஎட்டாத பேரழகு மிக்க கழல்பூண்டதிருவடிகளை தொழுது நின்று,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! – உன் பெரிய பெரியதன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.
குறிப்பு:
- பாசத்தால்கட்டுண்டபசுக்களின்உய்வின் பொருட்டு இறைவனால்நுண்ணுடலும்
(சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன
என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.
2. நுதல்– நெற்றி; இறைஞ்சி – வணங்கி; இறந்து – கடந்து; புகழும் ஆறு – புகழும் வகை.
6
புல்லாகிப்பூடாய்ப்புழுவாய்மரமாகிப்
பல் விருகமாகிப்பறவையாய்ப்பாம்பாகிக்
கல்லாய்மனிதராய்ப்பேயாய்க்கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவரசங்கமத்துள்
எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 30
பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கியபேய்களாகவும், பலதரப்பட்டகணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப்பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே!
குறிப்பு:
- விருகம்– மிருகம்; தாவர சங்கமம் – (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.
7
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள்ஓங்காரமாய் நின்ற
மெய்யாவிமலாவிடைப்பாகாவேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே35
பொருள்:
உன்னுடைய தங்கத்திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.
நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும்ஒலியாய் எழுந்த
உண்மைப்பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள்
“ஐயா !” எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும்பலபலதன்மைகளைப் பெருகி
ஆராய்ந்தும் காண முயலுகின்றமிகச்சிறியபொருளுமாகஇருப்பவனே !
குறிப்பு:
- இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமகளில்மூழ்கியிருப்போருக்கு
இங்கேயே வீடுபேறு – வேதம்.
2. வேதங்கள்பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபலகோணங்களில்கூறியும்
அவர் தம் பெருமையைக்கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய
அவரோமிகச்சிறியவற்றிலும்நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!
8
வெய்யாய், தணியாய், இயமானனாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்றமெய்ச்சுடரே
எஞ்ஞானம்இல்லாதேன்இன்பப்பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே40
பொருள்:
வெப்பமாகச்சுடுகின்றவரும், குளுமையாகஇருக்கின்றவரும்நீரே.என்உரிமையாளனாக உள்ள மாசற்றவனே ! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம்பெருமானே !
அறிவின்மையைப்போக்கும்நல்லறிவே !
குறிப்பு:
-
சுடர் மிகுவதால்இருளுக்குக் கேடு – பசவண்ணர்.
உள்ளத்தில்மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.
2. வெய்ய– காய்கின்ற/ சூடான; தணிய – குளுமையான.
9
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய்காப்பாய்அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய்என்னைப்புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின்நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே45
பொருள்:
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,
(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக்கொள்கின்றாய்,
உயிர்களைமாயைக்குள்போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூச்க்ஷ்சுமமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும்சிந்தனைக்கும்எட்டாது நிற்கும் மறை நாயகனே !
குறிப்பு:
- இறைவனுக்கு பிறவற்றைப்போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு,
அப்பெருமானே மற்ற எல்லாப்பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச்செய்கிறார் என்னும் திறத்தைவெளிப்படுத்துகிறார்.
2. ஒப். உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும்அருளைப்புரிவாய்.
3. மணமானது காண இயலாத நுண்பொருள்களாகப்பரவுகின்றது.
இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.
4. சேய்மை – தொலைவு; நணியது– அருகில் இருப்பது; மாற்றம் – சொல்.
10
கறந்த பால் கன்னலொடுநெய்கலந்தாற்போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள்தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள்ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ……
பொருள்:
அப்போது கறந்தபாலோடுகரும்பின்சாறும்நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய், எம்பெருமானே !
குறிப்பு:
- வினை நிறைந்த பிறப்பினால்அவதிப்படும்ஆன்மாக்களில்அன்பினால் இறைவன்
திருவடி பற்றுபவர்களுக்குக் கடினமான முறைகளினால் அல்ல, மிகவும் எளிதாகவும்தேனினும்
இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான்.
11
……. வல்வினையேன் தன்னை 50
மறைந்திடமூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும்வஞ்சனையைச் செய்ய, 55
பொருள்:
கொடிய வினையில்சிக்குண்டிருக்கும் என்னை
மறைத்து மூடியமாயையாகியஇருளினை
செய்யத்தகுந்தது, செய்யத்தகாதது என்னும் விதிகளால் கட்டி,
மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,
அழுக்கினைஉடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,
மலத்தினைவெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடானஇவ்வுடலை வைத்துக்கொண்டு
மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,
குறிப்பு:
- உடலின் கட்டுமானம் விவரிக்கப்படுகிறது.
12
விலங்கும்மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாதசிறியேற்குநல்கி
நிலம் தன்மேல் வந்து அருளிநீள்கழல்கள் காட்டி,
நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத்60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
பொருள்:
ஒருமைப்படாமல்சிதறுகின்றசிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற
நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகியஎன்க்கும் அருள்செய்து,
இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,
உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்ததிருவடிகள் காட்டி,
நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்
பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனானதத்துவப்பொருளே !
குறிப்பு:
- கேவலமான நிலையில் நாம் இருப்பினும் இறைவன் திருவருள் நம்முடைய
இழிவு கண்டு புறம் தள்ளாது, அளத்தலுக்கு இயலாத கருணையினால் நம்மை
ஆண்டு கொண்டருளும் வண்ணம் இங்கு தொழப்படுகின்றது.
13
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதேசிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப்பாரிக்கும்ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்65
பேராது நின்ற பெருங்கருணைப்பேராறே
பொருள்:
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !
ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தைஉடையவனே !
பாசமாகியகட்டினைஅறுத்துத் திருவருள் புரியும் அறிவிற்சிறந்தோனே !
இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,
என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணைபெருக்கெடுக்கும்பெருவெள்ளமே !
குறிப்பு:
- இறைவன் உயிர்கள் பால் அவரவர் தன்மைக்கு ஏற்ப அறக்கருணை, மறக்கருணை
காட்டி நல் வழிப்படுத்துகிறார். மணிவாசகப் பெருமான், சிவபெருமான் தமக்கு அறக்கருணை
புரிவதன்மூலமே நெஞ்சின் வஞ்சமெல்லாம் அகல வழிவகை செய்துவிட்டவகையைப்போற்றுகின்றார்.
14
ஆராஅமுதேஅளவிலாப்பெம்மானே
ஓராதார்உள்ளத்துஒளிக்கும்ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய்நின்றானே
இன்பமும்துன்பமும்இல்லானேஉள்ளானே70
பொருள்:
தெவிட்டாதஅமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்றபெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில்வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரெனஉருகச்செய்து, என்னுடைய இன்னுயிராகநிற்பவனே !
இன்ப துன்பங்களுக்குஅப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !
குறிப்பு:
- இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில்
எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும்
உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். மற்றவர்கள் அலைவரிசை
ஒன்றியையாதஒலிப்பெட்டி போல அவர் மிக அருகில் இருந்தும், பேரொளியாக இருந்தும்
காண இயலாதவர்களாக உள்ளனர்.
(ஒ. பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக்கோயிலாகக்கொள்வானே– திருமூலர்)
2. இறைவனுடையஎண்குணங்களில் ஒன்று வரம்பில்இன்பமுடைமை. அவ்வாறு இருக்க
“இன்பமும்துன்பமும்இல்லானே” எனக் கூறுவது பொருந்துமாஎனக் கேட்டால்,
இறைவனுக்குப்பிறவற்றால் எவ்வித இன்பமோதுன்பமோ இல்லை.
செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாதஇன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும்.
15
அன்பருக்குஅன்பனேயாவையுமாய்அல்லையுமாய்
சோதியனேதுன்னிருளேதோன்றாப்பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகிஅல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்75
நோக்கரியநோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
பொருள்:
அன்பினால்தன்னைத்தொழும்அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !
சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும்இருப்பவனே !
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !
முதலாகஇருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்
ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக –
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும்தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின்துணையாகக்உணர்கின்றபெரியோர்களுடையசிந்தையின்
பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !
குறிப்பு:
- சிவபெருமான் எல்லாப்பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல.
அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.
2. சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.
3. இறைவன் அன்பர்களுக்குஎளியவனாகக் காட்சி அளித்த போதிலும்,
அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது.
எனவே தான் அவருடைய இயல்பினைசற்றேனும் காண முயல்கின்றஞானிகளின்திறனை
வியந்து கூறுகின்றார்மாணிக்க வாசகர்.
(ஒ. பேரறியாதபெருஞ்சுடர்ஒன்றதின்வேரறியாமைவிளம்புகின்றேனே– திருமந்திரம்)
16
போக்கும்வரவும்புணர்வும்இலாப்புண்ணியனே
காக்கும் என் காவலனேகாண்பரியபேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமேஅத்தாமிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச்சொல்லாத நுண் உணர்வாய் 80
பொருள்:
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !
என்னைக்காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !
தொடர்ச்சியாகவும்முறையாகவும்வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற
ஒளி வீசும் சுடரானதோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து
குறிப்பு:
- இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனைநீங்குவார்,
புதிதாக வருவதற்கு அவர் இல்லாத்தது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத
பொருள் தான் ஏது – புதிதாகக்கலப்பதற்கு?இவ்வாறு எல்லாப்பொருளிலும் இருந்த போதிலும்,
பொருளின் தன்மையால்குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார்.
2. இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால்அறியப்படுபவர்.
(ஒ. அவனருளே கண் கொண்டு காணின்அல்லால்இப்படியன்இந்நிறத்தன்இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக்காட்டொணாதே– தேவாரம் )
17
மாற்றமாம்வையகத்தின்வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனேதேற்றத்தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றானஉண்ணார்அமுதேஉடையானே
வேற்றுவிகாரவிடக்குஉடம்பின்உள்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனே ஓ என்று என்று85
பொருள்:
இவ்வுலகில் பல்வேறு விதங்களில்கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத்தேறும்) தேற்றமே !
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள்
உண்பதற்க்கு மிகவும் அரியதும்விரும்பத்தக்கதும் ஆன அமுதஊற்றே !
என்னை உடைமையாகஆள்பவனே !
பலவேறுவிகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க
இயலவில்லை, எம்தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு
குறிப்பு:
- ஒ. ஏகம் சத்விப்ராபஹ¤தா வதந்தி – வேதம்.
18
போற்றிப்புகழ்ந்திருந்துபொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவிசாராமே
கள்ளப்புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள்இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே90
பொருள்:
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில்சிக்குறாது
மாயையால் ஆன இவ்வுடலின்கட்டுமானத்தை அழிக்க வல்லானே !
வேறு எதுவுமற்றதாகியஇருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !
தில்லை என்னும் சிதம்பரத்தில்ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !
குறிப்பு:
- இருள் என்பது (ஒளீ) இன்மையைக்குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய
பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலைஏதுமற்ற இருள் போன்றது.
அவ்விருளில்ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.
19
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்குஅரியானைச்சொல்லித்திருவடிக்கீழ்
சொல்லியபாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர்சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும்ஏத்தப் பணிந்து. 95
பொருள்:
அல்லல் நிறைந்த பிறவியைநீக்குவானே ! ஓ ! என்று
சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து
சொல்லியஇப்பாடலின்பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச்செல்வார்கள்,
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.
குறிப்பு:
- பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடுஒருமைப்பட்டுத்
தொழுதலால்அவ்வகைவணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம்.
-------------------
பொருள் / விளக்கம் :
நமச்சிவாயவாழ்க – திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க;
நாதன் தாள் வாழ்க – திருவைந்தெழுத்தின்வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க;
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க -இமைக்கும்நேரமுங் கூட என் மனத்தினின்றும்நீங்காதவனது திருவடி வாழ்க;
கோகழிஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க – திருப்பெருந்துறையில்எழுந்தருளிஎன்னையாட்கொண்டகுருமூர்த்தியினது திருவடி வாழ்க;
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – ஆகமவடிவாகி நின்று இனிமையைத்தருபவனாகியஇறைவனது திருவடி வாழ்க;
வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், “ஆகமமாகிநின்றண்ணிப்பான்” என்றார். ஆகமங்கள்காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு.
ஏகன்அநேகன் இறைவன் அடி வாழ்க – ஒன்றாயும்பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
“ஏகன்அநேகன்” என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது.
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற்கடவுளது திருவடி மேம்படுக;
மன ஓட்டத்தைத்தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும்இறைவனே என்பது, “வேகங்கெடுத்தாண்ட வேந்தன்”, “பிறப்பறுக்கும்பிஞ்ஞகன்” என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன்– தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்.
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன்பெய்கழல்கள்வெல்க – பிறவித்தளையைஅறுக்கிறஇறைவனதுவீரக்கழலணிந்ததிருவடிகள்மேம்படுக;
புறத்தார்க்குச்சேயோன்தன்பூங்கழல்கள்வெல்க – தன்னை வணங்காதஅயலார்க்குஎட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள்மேம்படுக;
இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவேவைத்துச் சிறிதும் விளங்கித்தோன்றாதிருத்தலின், “புறத்தார்க்குச்சேயோன்” என்றார்.
கரம் குவிவார் உள் மகிழும்கோன்கழல்கள்வெல்க – கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள்மேம்படுக;
சிரம் குவிவார்ஓங்குவிக்கும்சீரோன் கழல் வெல்க – கைகள் தலைமேல்கூம்பப்பெற்றவரைஉயரப்பண்ணுகிறசிறப்புடையவனது திருவடி மேம்படுக.
இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, “கரங்குவிவார், சிரங்குவிவார்” என்று கூறினார்
ஈசன் அடி போற்றி – ஈசனதுதிருவடிக்கு வணக்கம்,
எந்தை அடி போற்றி – எம்தந்தையினதுதிருவடிக்கு வணக்கம்,
தேசன் அடி போற்றி – ஒளியுருவைஉடையவனதுதிருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானதுதிருவடிக்கு வணக்கம்;
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி – அடியாரதுஅன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனதுதிருவடிக்கு வணக்கம்;
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – நிலையாமையுடையபிறவியைஒழிக்கின்றஅரசனதுதிருவடிக்கு வணக்கம்;
சீர் ஆர்பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண்எழுந்தருளிய நம்முடைய கடவுளதுதிருவடிக்கு வணக்கம்.
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – வெறுக்காதஇன்பத்தைக்கொடுக்கின்றமலைபோலும்கருணையையுடையவனுக்கு வணக்கம்.
ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால்பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால்இயல்பாகவேபாசங்களின்நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால்முடிவிலாஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால்முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலைஎன்றதனால்வரம்பில் இன்பமுடையனாதலுமாகியஇறைவனதுஎட்டுக்குணங்களையும்காட்டினார். “எண் குணத்தான்தாள்” என்ற நாயனார் அருள் மொழிக்குப்பரிமேலழகர்உரையில் கூறப்பட்டுள்ளஎண்குணங்களைக் காண்க
———————————————————————————-
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் – சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி,
சிந்தை மகிழ – மனம் மகிழும்படியும்,
சிவபுராணந்தன்னை – சிவனது அநாதி முறைமையானபழமையை
முந்தை வினை முழுதும் ஓய – முன்னைய வினை முழுமையும்கெடவும், ,
யான் உரைப்பன் – யான் சொல்லுவேன்.
கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி – நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து,
எண்ணுதற்குஎட்டாஎழிலார் கழல் இறைஞ்சி – நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியைவணங்கிய பின்,
———————————————————————————
விண் நிறைந்தும் – வானமாகிநிறைந்தும்,
மண் நிறைந்தும் – மண்ணாகிநிறைந்தும்,
மிக்காய் – மேலானவனே,
விளங்கு ஒளியாய் – இயல்பாய்விளங்குகின்றஒளிப்பிழம்பாகி,
எண் இறந்து – மனத்தைக் கடந்து,
எல்லை இலாதானே – அளவின்றிநிற்பவனே,
நின்பெருஞ்சீர் – உன்னுடைய மிக்க சிறப்பை,
பொல்லாவினையேன் – கொடிய வினையையுடையவனாகிய யான்,
புகழும் ஆறு ஒன்று அறியேன் – புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன்.
இறைவன் ஐம்பெரும்பூதங்களில்கலந்தும்அவற்றுக்குஅப்பாலாயும் இருக்கிறான் என்பதை விளக்க, “விண்ணிறைந்துமண்ணிறைந்துமிக்காய்” என்றார். “உலகெலாமாகிவேறாய்உடனுமாயொளியாய்” என்ற சித்தியார்திருவாக்கும்இதனையே வலியுறுத்துகிறது. இறைவனதுபெருமையைக்காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லாவினையேன்’ என்றார்.
புல் ஆகி – புல்லாகியும்,
பூடு ஆய் – பூண்டாகியும்,
புழு ஆய் – புழுவாகியும்,
மரம் ஆகி – மரமாகியும்,
பல்விருகமாகி – பல மிருகங்களாகியும்,
பறவை ஆய் – பறவையாகியும்,
பாம்பு ஆகி – பாம்பாகியும்,
கல் ஆய் – கல்லாகியும்,
மனிதர் ஆய் – மனிதராகியும்,
பேய் ஆய் – பேயாகியும்,
கணங்கள் ஆய் – பூதகணங்களாகியும்,
வல் அசுரர் ஆகி – வலிய அசுரராகியும்,
முனிவர் ஆய் – முனிவராகியும்,
தேவர் ஆய் – தேவராகியும்,
சொல்லாநின்ற – இயங்குகின்ற,
இ – இந்த,
தாவரசங்கமத்துள் – அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப்பொருள்களுள்ளே,
எல்லாப்பிறப்பும் பிறந்து – எல்லாப்பிறவிகளிலும் பிறந்து,
இளைத்தேன் – யான் மெலிவடைந்தேன்,
எம்பெருமான் – எம்பெருமானே,
மெய்யே – உண்மையாகவே,
உன் பொன் அடிகள் கண்டு – உன் அழகிய திருவடிகளைக் கண்டு,
இன்று – இப்பொழுது,
வீடு உற்றேன் – வீடு பெற்றேன்.
எல்லா உயிர்ப்பொருள்களையும்தாவரப் பொருள் (அசையாப்பொருள்), சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப்பிரிக்கலாம். தாவர வகையுள்கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கமவகையுள்புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை இக்காலத்தாரும் உடன்படுவர். ‘மிருகம்’ என்பது ‘விருகம்’ என மருவியது. உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச்சங்கமப்பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கிறது.
இனி, உயிர்களுக்குநால்வகைத் தோற்றமும் எழுவகைப்பிறப்பும் நூல்களிற்கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பனஎன்பன நான்கு வகைத்தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம்எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பனஎழுவகைப்பிறப்பாம்
உய்ய – நான் உய்யும்படி,
என் உள்ளத்துள் – என் மனத்தில்,
ஓங்காரம் ஆய் நின்ற – பிரணவஉருவாய் நின்ற,
மெய்யா – மெய்யனே,
விமலா – மாசற்றவனே,
விடைப்பாகா – இடபவாகனனே,
வேதங்கள் – மறைகள்,
ஐயா என – ஐயனே என்று துதிக்க,
ஓங்கி – உயர்ந்து,
ஆழ்ந்து அகன்ற – ஆழ்ந்து பரந்த,
நுண்ணியனே – நுண்பொருளானவனே.
ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப்பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகியமுத்தொழில்களையும்குறிக்குமாதலின் அவையேஉள்ளத்துள்நினைவின் தோற்றம், நிலை, இறுதியைச்செய்வனவாம். அவ்வெழுத்துகளால் உண்டாகும் ஒலியைஇறைவனதுசத்தியே செலுத்தி நிற்றலால்“உய்ய என் உள்ளத்துள்ஓங்காரமாய் நின்ற மெய்யா,” என்றார்.
சைவ நூல்கள், இடபஊர்தியை உயிர் என்று கூறும். ஆகவே, “விடைபாகா” என்றது, உயிருக்கு நாதன் என்றதாம்.
இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது.
“அல்ல யீதல்லயீதெனமறைகளுமன்மைச் சொல்லி னாற்றுதித்திளைக்குமிச் சுந்தரன்”
என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், மறைகளாலும்இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல் ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அருளால்தான் காணமுடியும் என்ற நயமும், “வேதங்கள் ஐயா என ஓங்கி” என்பதனால் கிடைக்கிறது.
இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும்இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுண்டு. அதைக் குறிப்பிட “ஆழ்ந்தகன்றநுண்ணியனே” என்றார். “அண்டங்க ளெல்லாம்அணுவாகஅணுக்களெல்லாம்அண்டங்களாகப்பெரிதாய்ச்சிறிதாயினானும்” என இறைவனதுநுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்.
வெய்யாய் – வெம்மையானவனே,
தணியாய் – தன்மையானவனே,
இயமானன் ஆம் விமலா – ஆன்மாவாய் நின்ற விமலனே,
பொய் ஆயின எல்லாம் – நிலையாத பொருள்கள் யாவும்,
போய் அகல – என்னை விட்டு ஒழிய,
வந்தருளி – குருவாய்எழுந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி – மெய்யுணர்வுவடிவமாய்,
மிளிர்கின்ற – விளங்குகின்ற,
மெய்ச்சுடரே – உண்மை ஒளியே,
எஞ்ஞானம்இல்லாதேன் – எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு,
இன்பப்பெருமானே – இன்பத்தைத் தந்த இறைவனே,
அஞ்ஞானந்தன்னை – அஞ்ஞானத்தின்வாதனையை,
அகல்விக்கும் – நீக்குகின்ற,
நல் அறிவே – நல்ல ஞானமயமானவனே.
இறைவன் தீயாய் நின்று வெம்மையைக் கொடுத்து, நீராய் நின்று குளிர்ச்சியைக் கொடுத்து, உயிருக்கு உயிராய் நின்று நல்வழியைக் காட்டி அருளைப்புரிகின்றான் என்பது,
“வெய்யாய்தணியாய்இயமானனாம்விமலா”
என்றதனால் கிடைக்கிறது.
ஒளியைக்கண்டதும் இருள் மறைவது போல, மெய்ஞ்ஞானத்தால் அஞ்ஞானம் விலகுகிறது. இறைவன் குருவாகி வந்து அருள்வதனால்மெய்ஞ்ஞானம் கிடைக்கிறது என்பதை, “பொய்யாயினவெல்லாம்போயகலவந்தருளிமெய்ஞ்ஞானமாகிமிளிர்கின்ற மெய்ச்சுடரே” என்றார். அஞ்ஞானம் வாதனையாய்நில்லாதுநீக்கப்பட்டுப் பற்றற்றுக்கழிதலும் இறைவன் திருவருளாலேயே என்பதற்கு, “அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும்நல்லறிவே” என்றார்.
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் – தோற்றம் நிலை முடிவு என்பவைஇல்லாதவனே,
அனைத்து உலகும் – எல்லா உலகங்களையும்,
ஆக்குவாய் – படைப்பாய்,
காப்பாய் – நிலைபெறுத்துவாய்,
அழிப்பாய் – ஒடுக்குவாய்,
அருள் தருவாய் – அருள் செய்வாய்,
போக்குவாய் – பிறவியிற்செலுத்துவாய்,
என்னை – அடியேனை,
புகுவிப்பாய் – புகப்பண்ணுவாய்,
நின் தொழும்பில் – உன் தொண்டில்,
நாற்றத்தின்நேரியாய் – பூவின் மணம்போலநுட்பமாய்இருப்பவனே,
சேயாய் – தொலைவில் இருப்பவனே,
நணியாய் – அண்மையில் இருப்பவனே,
மாற்றம் மனம் கழிய நின்ற – சொல்லும் மனமும் கடந்து நின்ற,
மறையோனே – வேதப்பொருளாய்உள்ளவனே,
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – கறந்தபாலும்சருக்கரையும்நெய்யும்கூடினது போல,
சிறந்த அடியார் சிந்தனையுள் – சிறந்த அன்பரதுமனத்துள்,
தேன் ஊறி நின்று -இன்பம் மிகுந்து நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் – எடுத்த பிறப்பைஒழிக்கின்ற,
எங்கள் பெருமான் – எம்பெருமானே.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்என்பனஇறைவனது ஐந்தொழில்களாம். அறியாமையில்கட்டுண்டிருக்கும் உயிருக்கு இறைவன் உடம்பைக் கொடுத்துப்படைக்கிறான்; எடுத்த உடம்பில் இருவினைகளைநுகரும்போதுஅறியாமையை நீக்கிக்காக்கிறான்; உயிர் அலுக்கா வண்ணம் ஓய்வு கொடுக்க அழிக்கிறான்; இவ்வாறு பிறப்பு இறப்புகளில்உழலும்படிஅறிவைமறைக்கிறான்; குற்றம் நீங்கிப் பக்குவம் (மலபரிபாகம்) வந்த காலத்துஅருளுகிறான்என்பவற்றை விளக்க, “ஆக்குவாய்காப்பாய்அழிப்பாய் அருள் தருவாய்” என்றார். ஆக்குதல் முதலிய நான்கனைக்கூறவே, மறைத்தலும்கொள்ளப்படும்.
ஆக்கமும்கேடும்இல்லாதவன்தானேஆக்கவும்அழிக்கவும் இயலும்? இதனால், “ஆக்கம் அளவிறுதியில்லாய்” என்றார்.
இறைவன் உயிர்க்ளைப் பக்குவம் வருவதற்கு முன்பு பிறவியில்செலுத்தியும், பக்குவம் வந்த பின்பு தனது திருவடிக்கு ஆளாக்கியும் ஆண்டுகொள்வனாகலின், “போக்குவாய்என்னைப்புகுவிப்பாய்நின்தொழும்பின்” என்றார்.
பூவில் மணம் போல ஆன்மாவில் இறைவன் கலந்திருக்கிறான். மலர் அரும்பாயிருக்கும்போது மணம் வீசாது; அலர்ந்தபின்னரே மணம் வீசும். அதைப் போல, ஆன்மா பக்குவப்பட்டது
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் – ஐந்து நிறங்களைஉடையவனே,
விண்ணோர்கள்ஏத்த – தேவர்கள் துதிக்க,
மறைந்து இருந்தாய் – அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே,
எம்பெருமான் – எம்பெருமானே,
வல்வினையேன் தன்னை – வலிய வினையையுடையவனாகிய என்னை,
மறைந்திடமூடிய – மறையும்படிமூடியுள்ள,
மாய இருள் – அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு,
அறம் பாவம் என்னும் – புண்ணிய பாவங்கள்என்கின்ற,
அருங்கயிற்றால் கட்டி – அறுத்தற்குஅருமையாகியகயிற்றால்கட்டப்பெற்று,
புறம்தோல் போர்த்து – வெளியே தோலால் மூடி,
எங்கும் புழு அழுக்கு மூடி – எவ்விடத்தும்புழுக்கள்நௌ¤கின்றஅழுக்கை மறைத்து ஆக்கிய,
மலம் சோரும் – மலம் ஒழுகுகின்ற,
ஒன்பது வாயில் குடில் – ஒன்பது வாயிலையுடையஉடம்பாகிய குடிசை,
மலங்க – குலையும்படி,
புலன் ஐந்தும் – ஐம்புலன்களும்,
வஞ்சனையைச் செய்ய – வஞ்சனை பண்ணுதலால்,
விலங்கும்மனத்தால் -உன்னை விட்டு நீங்கும்மனத்தினாலே,
விமலா – மாசற்றவனே,
உனக்கு – உன்பொருட்டு,
கலந்த அன்பு ஆகி – பொருந்தின அன்பை உடையேனாய்,
கசிந்து உள் உருகும் – மனம் கசிந்து உருகுகின்ற,
நலந்தான்இலாத – நன்மையில்லாத,
சிறியேற்கு – சிறியேனுக்கு,
நல்கி – கருணை புரிந்து,
நிலத்தன்மேல்வந்தருளி – பூமியின்மேல்எழுந்தருளி,
நீள் கழல்கள் காட்டி – நீண்ட திருவடிகளைக் காட்டி,
நாயின்கடையாய்க் கிடந்த அடியேற்கு – நாயினும்கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு,
தாயின் சிறந்த – தாயினும்மேலாகிய,
தயா ஆன – அருள் வடிவான,
தத்துவனே – உண்மைப்பொருளே.
இறைவன் ஐம்பூதங்களிலும்நிறைந்திருக்கிறான். ஐந்து பூதங்களுக்கும் ஐந்து நிறங்கள் உண்டு. மண்ணுக்குப்பொன்மையும், நீருக்குவெண்மையும், நெருப்புக்குச்செம்மையும், காற்றுக்குக்கருமையும், வானுக்குப்புகையையும் சாத்திரம் கூறும்.
“பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர்வான்தூமம்” என்பது உண்மை விளக்கம். இந்த ஐந்து நிறங்களையுடைய ஐந்து பூதங்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருத்தலால், “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்” என்றார்.
இனி, படைத்தல் முதலாக ஐந்து தொழில்கள் புரிவதற்கு ஐந்து வடிவங்கள்கொண்டிருக்கின்றான் என்றாலும் ஒன்று. ஐந்து வடிவங்களாவன, பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் வடிவங்கள்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுள் ஆணவம் நீங்குதற்பொருட்டே மாயையும்கன்மமும்சேர்க்கப்படுதலினால், “வல்வினையேன் தன்னை மறைந்திடமூடிய இருள் மாய” என்றார். ‘அறம்பாவம்’ என்பனகன்ம மலம் எனவும், ‘ஒன்பது வாயிற்குடில்’ என்பது மாயா மலம் எனவும் அறிக. ‘இருளை, குடிலை’ என்பவற்றுள் உள்ள ஐகாரம்சாரியைகள்.
ஒன்பது வாயிலாவன– செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று.
புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத்தோன்றிப் பின் துன்பத்தைத் தருவது. அதனால், “குடில் மலங்கப் புலன் ஐந்தும்வஞ்சனையைச் செய்ய” என்றும், அவ்வஞ்சனைச்செயல்களால் இறைவனை மறத்தல் உண்டாவதால், ‘விலங்கும்மனத்தால் கசிந்து உள் உருகும் நலந்தான்இலாதசிறியேன்’ என்றும் கூறினார்.
“நாய், தலைவனைஅறிவது : நன்றியுடையது. மனிதன் தலைவனையும் அறியமாட்டான்; நன்றியும் இல்லாதவன் ஆகையாலும், தாயன்பேசிறந்ததும், இழிவைக்கருதாததும் ஆகையாலும், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத்தாயிற்சிறந்ததயாவான தத்துவனே” என்றார்.
இவற்றால் தமக்கு இறைவன் திருப்பெருந்துறையில்குருவாய் வந்து அருளினதிறத்தை வியந்து போற்றினார்.
மாசு அற்ற சோதி மலர்ந்த – களங்கமற்றசோதியாகிய மரத்தில் பூத்த,மலர்ச்சுடரே – பூப்போன்றேசுடரே,
தேசனே – குரு மூர்த்தியே,
தேனே – தேனே,
ஆர்அமுதே – அரிய அமுதே,
சிவபுரனே – சிவபுரத்தையுடையானே,
பாசம் ஆம் பற்று அறுத்து – பாசமாகியதொடர்பையறுத்து,
பாரிக்கும் – காக்கின்ற,
ஆரியனே – ஆசிரியனே,
நேச அருள் புரிந்து – அன்போடு கூடிய அருளைச்செய்து,
நெஞ்சில் வஞ்சம் கெட – என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய,
பேராது நின்ற – பெயராமல் நின்ற,
பெருங்கருணை – பெருங்கருணையாகிய,
பேர் ஆறே – பெரிய நதியே,
ஆராஅமுதே – தெவிட்டாதஅமிர்தமே,
அளவு இலாப்பெம்மானே – எல்லையில்லாதபெருமானே,
ஓராதார்உள்ளத்து – ஆராயாதார் மனத்தில்,
ஒளிக்கும் – மறைகின்ற,
ஒளியானே – ஒளியையுடையானே,
நீராய் உருக்கி – என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி,
என் ஆர்உயிராய்நின்றானே – என் அரிய உயிராய்நின்றவனே,
இன்பமும்துன்பமும் – சுகமும்துக்கமும்,
இல்லானே – இயற்கையில்இல்லாதவனே,
உள்ளானே – அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே,
அன்பருக்குஅன்பனே – அன்பர்களிடத்துஅன்புள்ளவனே,
யாவையும் ஆய் – கலப்பினால்எல்லாப்பொருள்களும் ஆகி,
அல்லையும ஆம் – தன்மையினாலேஅல்லாதவனும்ஆகின்ற,
சோதியனே – பேரொளியையுடையவனே,
துன்இருளே – நிறைந்த இருளானவனே,
தோன்றாப்பெருமையனே – புறத்தேவெளிப்படாத பெருமை உடையவனே,
ஆதியனே – முதல்வனே,
அந்தம் நடு ஆகி – முடிவும்நடுவும் ஆகி,
அல்லானே – அவையல்லாதுஇருப்பவனே,
ஈர்த்து என்னை ஆட்கொண்ட – என்னை இழுத்து ஆட்கொண்டருளின,
எந்தை பெருமானே – எமதுதந்தையாகியசிவபெருமானே,
கூர்த்தமெய்ஞ்ஞானத்தால் – மிகுந்த உண்மை ஞானத்தால்,
கொண்டு உணர்வார்தம்கருத்தில் – சிந்தித்து அறிபவர் மனத்தினாலும்,
நோக்கு அரிய – எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய,
நோக்கே – காட்சியே,
நுண்உணர்வே – இயற்கையில்நுட்பமாகியஅறிவே,
போக்கும்வரவும்புணர்வும்இலாப்புண்ணியனே
காக்கும் எம்காவலனே – எம்மைக்காப்பாற்றுகின்றஎம்அரசனே,
காண்பு அரிய பேர் ஒளியே – காண்பதற்கரிய பெரிய ஒளியே,
ஆற்று இன்ப வெள்ளமே – மகாநதி போன்ற இன்பப்பெருக்கே,
அத்தா – அப்பனே,
மிக்காய் – மேலோனே,
நின்ற தோற்றச்சுடர்ஒளியாய் – நிலைபெற்றதோற்றத்தையுடையவிளங்குகின்றஒளியாகியும்,
சொல்லாத நுண் உணர்வு ஆய் – சொல்லப்படாத நுட்பமாகியஅறிவாகியும்,
மாற்றம் ஆம் வையகத்தின் – மாறுபடுதலையுடைய உலகத்தில்,
வெவ்வேறே வந்து – வெவ்வேறு பொருளாய்க்காணப்பட்டு வந்து,
அறிவு ஆம் – அறிவாய் விளங்கும், தேற்றனே– தௌ¤வானவனே,
தேற்றத் தௌ¤வே – தௌ¤வின் தௌ¤வே,
என் சிந்தனையுள் ஊற்று ஆன – என் மனத்துள்ஊற்றுப் போன்ற,
உண் ஆர்அமுதே – பருகுதற்கு அரிய அமிர்தமே,
உடையானே – தலைவனே.
சோதி– பேரொளி, அதிலிருந்து தோன்றுவது சுடர். சோதியை முழுதும் காண்பது அரிது. அதன்கண் உண்டாகும் ஒரு சிறு பகுதியாகியசுடரைக்காண்பது எளிது. ஆகவே, எளிவந்து அருள் புரிந்த இறைவனைச்“சோதி மலர்ந்த சுடரே” என்றார். இச்சுடர், மலர் போலக்குளிர்ச்சியைத்தருவதால், “மலர்ச்சுடர்” என்றார்.
பாசம்– அறியாமை.
அன்பர்கள் மனத்திலுள்ள வஞ்சனை கெட இறைவன் அதனை விட்டு நீங்காது பெருங்கருணைவெள்ளமாயும்அளவில்லாதஇன்பப்பொருளாயும்அங்குத் தங்குகின்றான். அப்பொழுது அம்மனம்நீராய் உருகுகிறது. அவ்வாறு உருகிய உயிரை இறைவன் தன்மயமாகச் செய்கின்றான். இக்கருத்துகளைவிளக்கவே, “நெஞ்சில் வஞ்சங்கெட…………….. நீராய் உருக்கி என் ஆருயிராய்நின்றானே” என்றான்.
இறைவன் தனக்கென ஓர் இன்பமும்துன்பமும்இல்லான்; அடியார்க்கு வரும் இன்பதுன்பங்களைத் தான் ஏற்றுக்கொள்வதனால்இன்பமும்துன்பமும் உள்ளான். அதனால், “இன்பமும்துன்பமும்இல்லானேஉள்ளானே,” என்றார்.
இறைவன், எல்லாப்பொருளிலும்கலந்திருத்தலால்“யாவையுமாய்,” தன்மையால் வேறாதலால்“அல்லனுமாய்” இருக்கிறான். ஒளியும்இருளும்அவனன்றிஇன்மையால், “சோதியனே, துன்னிருளே” என்றார். உலகத்திற்குஆதியும்நடுவும்முடிவுமாய் நிற்கின்ற இறைவன், தனக்கு அவற்றை உடையனல்லன்ஆதலின், “ஆதியனே அந்தம் நடுவாகிஅல்லானே” என்றார்.
இறைவனதுஉருவத்தைக் கண்ணால் காண முடியாது, அறிவினாலும் அறிய முடியாது என்பார், “நோக்கரியநோக்கே, நுணுக்கரியநுண்ணுணர்வே” என்றார்.
அனுபவத்தினால்காணக்கூடியவன் இறைவன் என்பதை உணர்த்த, “சிந்தனையுள்ஊற்றான உண்ணார்அமுதே” என்றார்.
உயிர்களின் மனப்பக்குவத்திற்கேற்ப இறைவன் அருளுவதை விளக்க, “மாற்றமாம்வையகத்தின்வெவ்வேறேவந்தறிவாம்தேற்றனே” என்றார்.
இவற்றால் இறைவன் பண்புகள்விளக்கப்பட்டன.
வேற்றுவிகார – வெவ்வேறு விகாரங்களையுடைய,
விடக்குஉடம்பின் உள் கிடப்பஆற்றேன் – ஊனாலாகியஉடம்பினுள்ளேதங்கிக்கிடக்கப்பொறேன்,
எம் ஐயா – எம் ஐயனே,
அரனே – சிவனே,
ஓ என்று என்று – ஓ என்று முறையிட்டு,
போற்றி – வணங்கி,
புகழ்ந்து இருந்து – திருப்புகழைஓதியிருந்து,
பொய் கெட்டு – அறியாமை நீங்கி,
மெய் ஆனார் – அறிவுருவானவர்கள்,
மீட்டு இங்கு வந்து – மறுபடியும் இவ்வுலகில் வந்து,
வினைப்பிறவிசாராமே – வினைப்பிறவியையடையாமல்,
கள்ளப்புலம்குரம்பைக் கட்டு – வஞ்சகத்தையுடையஐம்புலன்களுக்குஇடமானஉடம்பாகியகட்டினை,
அழிக்க வல்லானே – அறுக்க வல்லவனே,
நள்இருளில் – நடு இரவில்,
நட்டம் பயின்று – மிகுந்து,
ஆடும் – நடனம் செய்கின்ற,
நாதனே – இறைவனே,
தில்லையுள்கூத்தனே – திருத்தில்லையில்நடிப்பவனே,
தென்பாண்டி நாட்டானே – தென்பாண்டி நாட்டையுடையவனே,
அல்லல் பிறவி அறுப்பானே – துன்பப்பிறப்பைஅறுப்பவனே,
ஓ என்று – ஓவென்று முறையிட்டு,
சொல்லற்குஅரியானைச் சொல்லி – துதித்தற்குஅருமையானவனைத்துதித்து,
திருவடிக் கீழ் சொல்லியபாட்டின் – அவனது திருவடியின்மீதுபாடியபாட்டின்,
பொருள் உணர்ந்து சொல்லுவார் – பொருளையறிந்துதுதிப்பவர்,
சிவபுரத்தினுள்ளார் – சிவநகரத்திலுள்ளவராய்,
சிவன் அடிக்கீழ்செல்வர் – சிவபெருமானதுதிருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர்.
பல்லோரும்ஏத்த – எல்லாரும் துதிக்க,
பணிந்து – வணங்கி
வேறு வேறுவிகாரமாவன, நரை திரை மூப்பு பிணி சாக்காடுஎன்பன. பிறவியை அறுக்க விரும்புவார்க்குஇவ்வுடம்பும்சுமையாகும். ஆதலின், “விடக்குடம்பின் உட்கிடப்பஆற்றேன்” என்றார். நாயனாரும், “பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை,” என்று கூறினார்.
பொய்ப்பொருளைக்காண்பது அறியாமை; மெய்ப்பொருளைக்காண்பது அறிவு. மெய்ப்பொருளைக் கண்டவர், “மற்றீண்டுவாரா நெறி தலைப்படுவர்.” ஆதலின், சுவாமிகள்பொய்கெட்டுமெய்யானார்மீட்டிங்குவாராராகக் கூறினார்.
நள்ளிருள்– சர்வ சங்கார காலம்.
இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை.
சோமசுந்தரப்பெருமானாய்வீற்றிருந்து திருவிளையாடல் புரிந்த இடம் மதுரை.
இரண்டையும் குறிப்பிட, “தில்லையுட்கூத்தனே, தென்பாண்டி நாட்டானே” என்றார். தில்லை என்பது சிதம்பரம். பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை.
இவற்றால் இறைவனே இடைவிடாது துதிப்பவர்சிவபுரத்துச்செல்வர் என்பதும், இச்சிவபுராணத்தைஓதுவார்க்கு வரும் பயனும்கூறப்பட்டன.
திருச்சிற்றம்பலம்