Description
பரமார்த குரு கதைகள் Read Online
பரமார்த குரு கதைகள்
தஞ்சையை அடுத்து, நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றர் இருந்தது. அவ்வூரில்… முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன் என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள். நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள்; சுய அறிவும் அற்றவர்கள். மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள்; தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ய விருப்பமில்லாத சோம்பேறிகள்.
Reviews
There are no reviews yet.