சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளைஉ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன.

சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் 

எட்டுத்தொகை நூல்கள் (மொத்த நூல்கள் 8)

நூல்காலம்இயற்றியவர்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறுகபிலர்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகைநல்லந்துவனார் முதலிய பலர்
அகநானூறுபலர்
புறநானூறுபலர்

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள் (மொத்த நூல்கள் 10)

நூல் காலம்இயற்றியவர்
திருமுருகாற்றுப்படை8-ம் நூ.ஆ.நக்கீரர்
பொருநராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை4 – 6ஆம் நூ.ஆ.நற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை2 – 4ஆம் நூ.ஆ.நக்கீரர்
குறிஞ்சிப் பாட்டுகபிலர்
முல்லைப்பாட்டுநப்பூதனார்
மதுரைக் காஞ்சி2 மற்றும் 4 -ம் நூ.ஆ.மாங்குடி மருதனார்
பட்டினப் பாலை3 ம் நூ.ஆ.
மலைபடுகடாம் 2 மற்றும் 4 -ம் நூ.ஆ.பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (மொத்த நூல்கள் 18)

நூல் காலம்இயற்றியவர்
திருக்குறள் கி. மு 31திருவள்ளுவர்
நான்மணிக்கடிகை6 ஆம் நூ.ஆ.விளம்பி நாகனார்
இன்னா நாற்பது5 ஆம் நூ.ஆ.கபிலதேவர்
இனியவை நாற்பது5 ஆம் நூ.ஆ.பூதஞ்சேந்தனார்
களவழி நாற்பது5 ஆம் நூ.ஆ.பொய்கையார்
திரிகடுகம்4 ஆம் நூ.ஆ.நல்லாதனார்
ஆசாரக்கோவை7 ஆம் நூ.ஆ.பெருவாயின் முள்ளியார்
பழமொழி நானூறு6 ஆம் நூ.ஆ.மூன்றுரை அரையனார்
சிறுபஞ்சமூலம்6 ஆம் நூ.ஆ.காரியாசான்
முதுமொழிக்காஞ்சி4 ஆம் நூ.ஆ.கூடலூர் கிழார்
ஏலாதி6 ஆம் நூ.ஆ.கணிமேதாவியார்
கார் நாற்பது6 ஆம் நூ.ஆ.கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது6 ஆம் நூ.ஆ.மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது6 ஆம் நூ.ஆ.கண்ணன் பூதனார்
ஐந்திணை எழுபது6ஆம் நூ.ஆ.மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது6ஆம் நூ.ஆ.கணிமேதாவியார்
கைந்நிலை6 ஆம் நூ.ஆ.புல்லங்காடனார்
நாலடியார்7 ஆம் நூ.ஆ.சமணமுனிவர்கள் பலர்

Related Post

புத்தகங்களைப் படிப்பதன் 10 நன்மைகள்

Posted by - September 10, 2020 0
புத்தகங்களைப் படிப்பதன் நன்மைகள் என்ன? கடைசியாக நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்தது அல்லது கணிசமான பத்திரிகை கட்டுரைகள் படித்தது எப்போது? தவறாமல் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தாத எண்ணற்ற…

புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது ?

Posted by - September 10, 2020 0
புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது ? உங்கள் சொந்த விருப்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்றால்,  Fiction or Non-fiction புத்தகத்தை எடுக்க விரும்பலாம். இதபோன்ற ஆயிர கணக்கான புத்தகங்கள்…

Fiction” Vs Non-Fiction புத்தகங்கள்

Posted by - September 10, 2020 0
Fiction & Non-Fiction ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்? Fiction “புனைகதை” (Fiction) என்பது கற்பனையிலிருந்து உருவாக்கப்பட்ட இலக்கியங்களைக் குறிக்கிறது. உதாரணமாக. மர்மங்கள், அறிவியல் புனைகதை, காதல், கற்பனை,…

நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

Posted by - January 11, 2021 0
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்? நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் தொடக்கப்பள்ளி முதல் கற்று இருப்பீர்கள்.…

படிக்க புத்தகங்களை எவ்வாறு தேர்வு செய்வது?

Posted by - September 13, 2020 0
புத்தகம் படிப்பது எப்படி? ஒரு புத்தகத்தப் பற்றி முழுமையாக நீங்கள் அறியும் முன் மூன்று முறை படிக்க வேண்டும். முதல் முறை கதைக்காக அதைப் படித்தீர்கள். இரண்டாவது…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்